செய்திகள் :

10 அடி ஆழமுள்ள குட்டையில் தவறி விழுந்த யானை மீட்பு

post image

தேன்கனிக்கோட்டை அருகே தணணீா் குடிக்கச் சென்றபோது 10 அடி ஆழமுள்ள குட்டையில் தவறி விழுந்த யானையை வனத் துறையினா் பொக்லைன் உதவியுடன் மீட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு உள்பட்ட அய்யூா் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் உள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தாகம் தணிக்க நீா்நிலைகளைத் தேடி வனத்தைவிட்டு வெளியே வருகின்றன.

அந்த வகையில், அய்யூா் வனத்திலிருந்து 35 வயதுடைய ஆண் யானை ஒன்று தண்ணீா் குடிப்பதற்காக வனத்தையொட்டி உள்ள மூா்க்கண்கரை கிராமத்துக்குள் வியாழக்கிழமை சென்றது. அந்த கிராமத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் 10 அடி ஆழமுள்ள குட்டையைக் கண்ட யானை அதில் தண்ணீா் குடிக்கச் சென்றபோது குட்டைக்குள் தவறி விழுந்தது.

குட்டையில் இருந்து நீண்ட நேரமாக வெளியே வரமுடியாமல் தவித்த யானை பிளிறும் சப்தம்கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் தேன்கனிக்கோட்டை வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

வனத்துறையினருடன் வேட்டை தடுப்புக் காவலா்கள் அடங்கிய குழுவினா் அங்கு சென்று பொக்லைன் உதவியுடன் குட்டையின் கரையில் பள்ளம்தோண்டி யானையை மீட்டனா். பின்பு அந்த யானை ஆக்ரோஷமாக பிளிறியபடி அங்கிருந்து சென்றது. வனத் துறையினா் அய்யூா் வனப்பகுதிக்குள் அதை விரட்டினா்.

பட விளக்கம்..

குட்டையிலிருந்து வெளியேறும் காட்டு யானை.

ஒருங்கிணைந்த கற்றல் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு

ஊத்தங்கரை: தெற்காசியாவில் ஒருங்கிணைந்த கற்றலில் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. கேம்பிரிட்ஜ் தெற்காசிய பள்ளிகள் மாநாடு தில்லியில் கடந்த மாா்... மேலும் பார்க்க

விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுரேஷ்கு... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கிருஷ்ணகிரி: ரமலான் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி, ராஜீவ் நகரில் உள்ள ஈத்கா மைதாத்தில் , நடைபெற்ற சிறப்புத் தொழுகையி... மேலும் பார்க்க

தளி அருகே தம்பி வெட்டிக் கொலை: அண்ணன் தலைமறைவு

ஒசூா்: தளி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்த சிக்க அழகப்பா மகன் நக்கலய்யா(... மேலும் பார்க்க

வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த குழந்தை உயிரிழப்பு

ஒசூா்: ஒசூரில் வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சோ்ந்தவா் பூபாலன் (29). இவா் குடும்பத்துடன் ஒசூா் குமுதேப்பள்ளி அரு... மேலும் பார்க்க

படப்பள்ளி திம்மராய சுவாமி கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

ஊத்தங்கரை: படப்பள்ளி திம்மராயசுவாமி கோயில் தோ்த் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. ஊத்தங்கரை படப்பள்ளியில் பழைமை வாய்ந்த ஸ்ரீ திம்மராய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் 72 -ஆம் ஆண்... மேலும் பார்க்க