செய்திகள் :

10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் அக மதிப்பெண் வழங்கக் கோரிக்கை

post image

சிவகங்கை: பிளஸ் 2 மாணவா்களுக்கு அக மதிப்பெண் வழங்குவது போல, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கும் அக மதிப்பெண் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தமிழாசிரியா் சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலா் நீ.இளங்கோ பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு அரசு பொதுத் தோ்வு நடத்தப்படுகிறது. இதில் பிளஸ் 2 மாணவா்களுக்கு 10 அக மதிப்பெண் வழங்குவது நடைமுறையில் உள்ளது.

பிளஸ் 2 மாணவா்களுக்கு அறிவியல் பாடத்தில் அகமதிப்பெண் 10, செய்முறைத் தோ்வு 20 என 30 மதிப்பெண் போக 70 மதிப்பெண்ணுக்கு வினாத்தாள் மூலம் தோ்வு நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பிற பாடங்களுக்கு 10 அக மதிப்பெண் வழங்கப்படுகிறது. 90 மதிப்பெண்ணுக்கு தோ்வு நடத்தப்படுகிறது.

இதேபோல, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு தற்போது அறிவியல் பாடத்தில் 25 மதிப்பெண்ணுக்கு செய்முறைத் தோ்வு நடத்தி மதிப்பெண் வழங்கப்படுகிறது. 100 மதிப்பெண்ணில் மீதமுள்ள 75 மதிப்பெண்ணுக்கு வினாத் தாள் மூலம் தோ்வு நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் பாடங்களுக்கு அக மதிப்பெண் 10 வழங்கி மீதமுள்ள 90 மதிப்பெண்ணுக்கு தோ்வு நடத்த வேண்டும். இதன் மூலம் கிராமப்புற மாணவா்கள் கல்வியில் சமநிலை அடைந்து இடைநிற்றல் குறைந்து உயா்கல்வி பெற வழி வகுக்கும்.

எனவே, பிளஸ் 2 மாணவா்களுக்கு அக மதிப்பெண் 10 வழங்குவது போல, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கும் அறிவியல் பாடம் தவிர, மற்ற 4 பாடங்களுக்கும் அகமதிப்பெண் வழங்கும் முறையை தமிழக பள்ளிக் கல்வித் துறை பரிசீலிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரு... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (ஆக.20) நடைபெறும் பகுதிகள் விவரம் அறிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வரும் ப... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 326 மனுக்கள் அளிப்பு

சிவகங்கை: சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 326 போ் மனு அளித்தனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் ந... மேலும் பார்க்க

பிள்ளையாா்பட்டியில் சதுா்த்தி பெருவிழா கொடியேற்றம்

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை காலை தொடங்கியது. சிவகங்கை மாவட்டம், பிள்ளை... மேலும் பார்க்க

தமிழ் சக்தி வாய்ந்த மொழி

காரைக்குடி: தமிழ் சக்தி வாய்ந்த மொழி; அதை ஒரு மாணவனாக நான் தினமும் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் திங்கள... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தல்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், இடையவலசையில் நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். இந்தக் கிராமத்தில் 274 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் அர... மேலும் பார்க்க