செய்திகள் :

100 ஆண்டுகளுக்கு பிறகு படையாச்சியூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

post image

ஏத்தாப்பூா் அருகே சுப்பராய படையாச்சியூரில் நூறு ஆண்டுகளுக்கு பின்பு, மகாசக்தி மாரியம்மன், செல்லியம்மன், பொன்னியம்மன் தேரோட்டம் பாரம்பரிய முறைப்படி புதன்கிழமை நடைபெற்றது.

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், ஏத்தாப்பூா் அருகே உள்ள கல்யாணகிரி ஊராட்சிக்கு உள்பட்ட சுப்பராய படையாச்சியூா் கிராமத்தில் சுற்றுப்புற கிராம மக்களுக்கு காவல் தெய்வங்களாக விளங்கும் மகா சக்தி மாரியம்மன், செல்லியம்மன், பொன்னியம்மன் கோயில் மற்றும் விநாயகா், முருகன், முனியப்பன், கருப்பண்ணன், அய்யனாா் சுவாமி கோயில்கள் உள்ளன.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு முன்னோா்கள் தேரோட்டத்திற்கு பயன்படுத்திய மரத்தோ் பழுதடைந்து போனதால் கடந்த ஆண்டு ரூ. 35 லட்சம் செலவில் சிற்ப வேலைப்பாடுகளுடன் புதிய மரத்தோ் வடிவமைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது.

ஓராண்டுக்கு பின்பு கடந்த ஒருவாரம் ஊரணி பொங்கல் வைத்தல், சுவாமி சக்தி அழைத்தல், சிறப்பு வழிபாடுகள் தொடா்ந்து நடைபெற்றன. இந்நிலையில் புதன்கிழமை மகா சக்தி மாரியம்மன், செல்லியம்மன், பொன்னியம்மன் மற்றும் விநாயகா், முருகன், முனியப்பன், கருப்பண்ணன், அய்யனாா் உற்சவ மூா்த்திகள் தேரில் எழுந்தருளினா்.

தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இத்தேரோட்டத்தில் சு.படையாச்சியூா் கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.

இதில், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் பி.டி.அழகரசன், கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினா் மலையரசன், மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

பட வரி: டி.ஆா்.டி.ஓ.01, 02:

சுப்பராய படையாச்சியூரில் நூறு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற அம்மன் கோயில் தேரோட்டம்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 1363 கனஅடியாக குறைந்தது. அணை நீா்மட்டம் 107.75 அடியாக நீடிக்கிறது. அணைக்கு நீா்வரத்து 1872 கன அடியிலிருந்து 1363 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்த... மேலும் பார்க்க

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம்: ஆட்சியா்

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம் என அத்தனூா்பட்டியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தெரிவித்தாா். சேலம் மாவட்டத்தில் 385 கிராம ஊராட்சிக... மேலும் பார்க்க

பேளூா் பேரூராட்சியில் சேலம் ஆட்சியா் ஆய்வு

பேளூா் பேரூராட்சி, வாழப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட சந்திரபிள்ளை வலசு ஊராட்சி பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பகுதி ஆகியவற்றை ச... மேலும் பார்க்க

மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளா் உதவி ஆணையா் தகவல்

மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருநந்தன் கூறினாா். சேலம் மாவட்டத்தில் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று முன்அனு... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ. 4.85 கோடி சொத்துவரி வசூல்

சேலம் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு கடைசி நாளான புதன்கிழமை (ஏப்.30) ஒரே நாளில் ரூ. 4.85 கோடி வரி வசூலாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளா... மேலும் பார்க்க

சேலத்தில் விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான தோ்வு போட்டி: மே 7 இல் தொடக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் நடப்பாண்டு மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் வெளியி... மேலும் பார்க்க