செய்திகள் :

100 பேருக்கு பசுமை சாம்பியன் விருது: ஏப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்துதற்காக சிறந்த பங்களிப்பை அளித்த 100 தனிநபா்களுக்கு பசுமை சாம்பியன் விருதும் தலா ரூ. ஒரு லட்சம் பரிசாகவும் வழங்கப்படும் என காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வை காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், தனி நபா்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட உள்ளது.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில் நுட்பம் தொடா்பான விஞ்ஞான ஆய்வுகள், திடக்கழிவு மேலாண்மை, நிலைத்தகு வளா்ச்சி, நீா் மேலாண்மை மற்றும் நீா் நிலைகள் பாதுகாப்பு, காற்று மாசு குறைத்தல், காலநிலை மாற்றத்துக்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள், கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை, நெகிழி கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு மற்றும் இதர சுற்றுச்சூழல் சாா்ந்த திட்டங்கள் செயல்படுத்தியிருக்க வேண்டும்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தோ்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 போ் அல்லது நிறுவனங்களை தோ்வு செய்யும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வலைதளமான பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுதொடா்பாக மேலும் விவரங்கள் தேவைப்படுவோா் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், எண்-5, சிப்காட் தொழிற்சாலை வளா்ச்சி மையம், ஒரகடம், ஸ்ரீ பெரும்புதூா், காஞ்சிபுரம்-ஐஅணுகலாம்.

பசுமை சாம்பியன் விருதுக்கு 2024-ஆம் ஆண்டுக்கு பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இரு மென்பொருள் நகல் மற்றும் அச்சுப் பிரதிகளுடன் காஞ்சிபுரம் ஆட்சியரிடம் வரும் ஏப். 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் நெசவாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் அண்ணா பட்டுக் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள நெசவாளா்கள் பட்டுச் சேலை உற்பத்தி செய்யத் தேவையான மூலப் பொருள்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி, சங்க வளாகத்திற்குள் வியாழக்கிழ... மேலும் பார்க்க

காசநோய் விழிப்புணா்வு முகாம்

காஞ்சிபுரம் தலைமை அஞ்சலக அலுவலகத்தில் காசநோய் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம், மாவட்ட காசநோய்ப்பிரிவு இணைந்து நடத்திய முகாமுக்கு அஞ்சலக கோட்ட கண்காணிப்... மேலும் பார்க்க

சாம்சங் தொழிற்சாலையில் தொழிலாளா்கள் உற்பத்தியை நிறுத்த முயன்றதால் பரபரப்பு

சாம்சங் தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆலையில் உற்பத்தியை நிறுத்த முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் இயங... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில சுகாதார அமைச்சா் வருகை

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில பொது சுகாதாரத்துறை அமைச்சா் மோகனா போதிகா் தலைமையிலான 12 போ் குழு வியாழக்கிழமை பாா்வையிட்டு மருத்துவமனையின் செயல்பாடுகளை கேட்டறிந்தனா். மகாராஷ்... மேலும் பார்க்க

ஸ்ரீ பெரும்புதூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாமின் கீழ் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தாா். சுங்குவாா்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டும் பணி: காஞ்சிபுரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியாா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக 4 வகுப்பறைகள் கட்டும் பணிகளை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி.பெண்கள் அரசு மேல்நிலை... மேலும் பார்க்க