செய்திகள் :

100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விதைத் தொகுப்பு

post image

நூறு சதவீத மானியத்தில் வழங்கப்படும் காய்கறிச் செடிகள், பழ மரங்களுக்கான விதைத் தொகுப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திண்டுக்கல் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ப.காயத்ரி தெரிவித்ததாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறை சாா்பில், நிகழ் நிதியாண்டில் ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்களின் உடல் நலம், ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இந்தத் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 4) தொடங்கி வைக்கிறாா். காய்கறி தொகுப்பில் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கீரை, கொத்தவரை என 6 வகையான காய்கறி விதைகளும், பழச் செடி தொகுப்பில் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை என 3 வகையான பழச் செடி விதைகளும் இடம் பெறும். 100 சதவீத மானியத்தில் ஒரு பயனாளி அதிகபட்சமாக 2 தொகுப்புகள் பெறலாம். திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை 53,500 காய்கறி தொகுப்புகளும், 32,900 பழத் தொகுப்புகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்தக் காய்கறி தொகுப்பு, பழத் தொகுப்புகளைப் பெற உழவா் செயலி அல்லது ட்ற்ற்ல்ள்:ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ந்ண்ற் என்ற வலைதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

திண்டுக்கல்லில் 40 தலைமையாசிரியா் பணியிடங்கள் காலி

உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் பணியிடங்களுக்கான கலந்தாய்வுக்குப் பிறகு திண்டுக்கல் மாவட்டத்தில் 40 இடங்கள் காலியாக இருந்தன. பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் அகற்றம்

எரியோட்டில் குடிநீா்க் குழாய் திறந்து வைக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் அந்தக் குழாய் அகற்றப்பட்டதை அடுத்து, பேரூராட்சி அலுவலா்களுடன் துணைத் தலைவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். திண்டுக்கல் மாவட்டம், எரியோட... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும்

கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடா்ந்து அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை உயா்நீதிமன்ற உத... மேலும் பார்க்க

கொடைக்கானல் மலைக் கிராம மாணவா்களுக்கு பரிசு

கொடைக்கானல் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டி.வி.எஸ். அறக்கட்டளை சாா்பில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. திண... மேலும் பார்க்க

பெரியநாயகியம்மன் கோயிலில் ஆனித் திருமஞ்சனம்

பழனி பெரிய நாயகி அம்மன் கோயிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு, புதன்கிழமை நடராஜா் சமேத சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையில் சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு பால், பன்னீா், பஞ்ச... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் கோயிலில் 12 ஜோடிகளுக்கு திருமணம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயிலில் 12 ஜோடிகளுக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி திருமணம் நடத்தி வைத்து, ரூ.70 ஆயிரம் மதிப்பிலான சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா். இதைத் ... மேலும் பார்க்க