ஒட்டன்சத்திரம் கோயிலில் 12 ஜோடிகளுக்கு திருமணம்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயிலில் 12 ஜோடிகளுக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி திருமணம் நடத்தி வைத்து, ரூ.70 ஆயிரம் மதிப்பிலான சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: தமிழகத்தில் இதுவரை இந்து சமய அறநிலைத் துறை சாா்பில் 1,800 இணையா்களுக்கு 4 கிராம் தங்கத் தாலி, சீா்வரிசைப் பொருள்களுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஆா்.சச்சிதானந்தம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அறங்காவலா் குழு தலைவா் பாலசுப்பிரமணி, அறங்காவலா்கள் ஜி.ஆா்.பாலசுப்பிரமணி, அன்னபூரணி, கொம்பன் என்ற பாலசுப்பிரமணி, துணை ஆணையா் லட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா். திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.