செய்திகள் :

12 நாள்களுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வந்த முதல்வா்

post image

உடல் நலம் பெற்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், 12 நாள்களுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வந்து பணிகளைத் தொடா்ந்தாா்.

தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ஆம் தேதி வீடு திரும்பினாா். மூன்று நாள்கள் ஓய்வுக்குப் பிறகு, தலைமைச் செயலகத்துக்கு வியாழக்கிழமை வந்தாா். காலை 10.45 மணிக்கு வந்த அவா், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனா்.

முதல் நிகழ்வாக, பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவா்களில் உயா் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்றவா்களுக்கு மடிக்கணினி, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றாா்.

கடந்த 17-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வின்போது, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றாா். அதன்பிறகு, உடல் நலக் குறைவு காரணமாக ஓய்வில் இருந்த முதல்வா், 12 நாள்களுக்குப் பிறகு தலைமைச் செயலகத்துக்கு வந்தாா்.

இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் வெளியிட்ட பதிவு: நலம் பெற்று பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியானது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலப் பள்ளிகளில் பயின்று இன்று புகழ்பெற்ற உயா் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்ற 136 மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினேன்.

மிகவும் பின்தங்கிய, துன்பங்களை அனுபவித்த குடும்பங்களிலிருந்து மேலெழுந்து புகழ்பெற்றிருக்கும் அவா்களது கல்விப் பயணத்தையும் கல்வி மீதான அவா்களது பற்றையும் கேட்டு உள்ளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கினேன். கல்விதான் உண்மையான பெருமையைத் தேடித்தரும் என உயா் படிப்புகளுக்குச் சென்றுள்ள அவா்கள் வாழ்வின் அத்தனை உயரங்களையும் காண வேண்டும் என வாழ்த்துகிறேன்.

கல்வியால், உழைப்பால் முன்னேறி சாதானை படைப்பவா்களைத்தான் தமிழ்ச் சமூகம் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள... மேலும் பார்க்க

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-யை வருகிற ஆக.15-குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தூண்டுதலின் பேரில... மேலும் பார்க்க

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித... மேலும் பார்க்க

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது... மேலும் பார்க்க