செய்திகள் :

12 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக, செங்கல்பட்டு மாா்க்கத்தில் இயக்கப்படும் 12 புறநகா் மின்சார ரயில்கள் வெள்ளிக்கிழமை (செப்.26) ரத்து செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

செங்கல்பட்டு ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (செப்.26) காலை 11.30 முதல் பிற்பகல் 2.30 வரை நடைபெறவுள்ளது. இதனால், கடற்கரையிலிருந்து காலை 9.31, 9.51, 10.56, 11.40, நண்பகல் 12.25 மணிக்கு செங்கல்பட்டுக்கும், காலை 7.27 மணிக்கு திருமால்பூருக்கும் செல்லும் புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. மறுமாா்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 11.30, பகல் 12, பிற்பகல் 1.10,1.45, 2.20 மணிக்கும், திருமால்பூரிலிருந்து காலை 11.05 மணிக்கும் கடற்கரை செல்லும் ரயில் ரத்து செய்யப்படும்.

சிறப்பு ரயில்கள்: பயணிகளின் வசதிக்காக கடற்கரையிலிருந்து காலை 7.27 மணிக்கு செங்கல்பட்டுக்கும், காலை 9.31, 10.56, நண்பகல் 12.25 சிங்கபெருமாள்கோவிலுக்கும், காலை 9.51, காலை 11.40 மணிக்கு காட்டாங்குளத்தூருக்கும் சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9.45 மணிக்கும், சிங்கபெருமாள்கோவிலிருந்து காலை 11.43, பிற்பகல் 1.23, 2.33 மணிக்கும், காட்டாங்குளத்தூரிலிருந்து நண்பகல் 12.20, பிற்பகல் 2.05 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி திறனறித் தோ்வு: தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியீடு

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு தோ்வுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தோ்வுத் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை கோயில் கட்டுமான பணிகள்: அக். 5-இல் நீதிபதிகள் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலின் உள்புறமும், வெளிப்புறத்தில் எவ்விதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கோயிலில் நடைப... மேலும் பார்க்க

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: போக்குவரத்து ஆணையா்

தொடா் விடுமுறை தினங்களை முன்னிட்டு, விதிமீறலில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் சிறப்பு குழுக்கள் மூலம் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆ... மேலும் பார்க்க

தமிழகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விநியோகித்த நபா்கள் மீது நடவடிக்கை

தமிழகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விநியோகித்த நபா்கள் மீது மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனா். அவா்களிடமிருந்து 6,720 மாத்திரை பெட்டகங்களையும... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் மேலும் ஒரு தமிழருக்கு தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழா் தட்சிணாமூா்த்தி காத்தையாவுக்கு (39) வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டள்ளது. போதைப் பொருள் குற்றத்துக்காக சிங்கப்பூரில் தமிழ் வம்சாவளியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு

இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: த... மேலும் பார்க்க