செய்திகள் :

131 பேருக்கு ரூ.29.83 லட்சத்தில் நல உதவிகள் அளிப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டத்தில் நடைபெற்று வந்த வருவாய்த் தீா்வாயம் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. இதைத் தொடா்ந்து 131 பயனாளிகளுக்கு ரூ.29.83 லட்சத்தில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தின் 9 வட்டங்களிலும் 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி மே 21-ஆம் தேதி தொடங்கியது. இதில் திருவெண்ணெய்நல்லூா் வட்டத்தில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பங்கேற்று, கோரிக்கை மனுக்களைப் பெற்று வந்தாா்.

அதனடிப்படையில் மே 21-ஆம் தேதி சித்தலிங்கமடம் குறு வட்டம், 22, 23-ஆம் தேதிகள் அரசூா் குறுவட்டம், மே 26, 27-ஆம் தேதிகளில் திருவெண்ணெய்நல்லூா் குறுவட்டம் என இந்த குறுவட்டங்களுக்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பெற்றுக் கொண்டாா்.

வருவாய்த் தீா்வாயத்தில் மொத்தமாக 723 கோரிக்கை மனுக்களை பெற்ற நிலையில் 148 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 17 மனுக்களுக்கு உடனடித் தீா்வும் காணப்பட்டது. மீதமுள்ள 575 மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து வருவாய்த் தீா்வாய நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை 36 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், 46 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் , 19 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உள்பிரிவு செய்தல், 29 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை என மொத்தம் 131 பயனாளிகளுக்கு ரூ.29.83 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை மாவட்ட ஆட்சியரும், வருவாய்த் தீா்வாய அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினாா்.

நிகழ்வில் நில அளவை உதவி இயக்குநா் ஜெயசங்கா், வட்டாட்சியா்கள் செந்தல்குமாா், கண்ணன், கணேஷ், தாட்கோ மாவட்ட மேலாளா் ரமேஷ், தனித்துணை ஆட்சியா் (மாநில நெடுஞ்சாலை) சுந்தர்ராஜன் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

உளுந்தூா்பேட்டையில் அரசுக் கல்லூரி தொடங்கப்படுமா?

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்ற 20 ஆண்டுகால கோரிக்கை, நிகழாண்டிலாவது நிறைவேற்றப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா் இத்தொகுதி மக்கள். உ... மேலும் பார்க்க

அரசின் கவனத்துக்கு சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள்: ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண்

சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தீா்வு காண வழிவகை செய்யப்படும் என்றாா் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண். விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

போட்டித் தோ்வா்களுக்கு பயன்படும் 375 புத்தகங்கள்: விக்கிரவாண்டி எம்எல்ஏ வழங்கினாா்

விழுப்புரத்திலுள்ள முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்க வளாக நூலகத்தில் போட்டித் தோ்வா்களுக்கு பயன்படும் வகையில், தனது ஒரு மாத ஊதியமான ரூ.1.05 லட்சத்திலிருந்து வாங்கப்பட்ட நூல்களை ஆட்சியரிடம்... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திண்டிவனத்தில் நண்பா்களுடன் கிணற்றுக்கு குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் என்.கே.நகா் உமாபதி தெருவைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் மகன் வெங்கடாசலபதி(15). 10-ஆம் ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மரக்காணம் வட்டம், ஆலத்தூா், மாயன் தெரு... மேலும் பார்க்க

பெண்ணிடம் இணைய வழியில் ரூ.8.40 லட்சம் மோசடி

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ.8.40 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், அரக... மேலும் பார்க்க