செய்திகள் :

14 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

post image

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் புவனேசுவரத்தில் நடைபெற்ற தேவி விருதுகள் விழாவில், 14 பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ஒடிசா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தேவி விருதுகள் - 2025 விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஒடிசா சட்டப்பேரவைத் தலைவர் சுரம பதி, பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்தார்.

தி நியூ இந்திய எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.

விருது பெற்றவர்கள்

கட்டடக் கலைஞர் விஜயா அமுஜுரே, நீட் தேர்வில் வெற்றி பெற்ற திதாயி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் சம்பா ரசேதா, மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலர் கார்கி பட்டாச்சார்யா, விவசாயி ரைமதி குரியா, மருத்துவர் ஸ்ம்ருதி ஸ்வைன், உலகப் புகழ்பெற்ற ஒடிஸி கலைஞர் சுஜாதா மொஹபத்ரா உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.

மேலும், தொழில்முனைவோர் மினுஸ்ரீ மதுமிதா, விஞ்ஞானி ஜோதிர்மயி தாஷ், சமூக ஆர்வலர் நிபேதிதா லென்கா, சமையல் கலைஞர் மதுஸ்மிதா சோரன், வனக் காவலர் கிராப்தி சேத், கைவினைக் கலைஞர் கனகலதா தாஸ் மற்றும் நடிகை அர்ச்சிதா சாஹு ஆகியோருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

At the Devi Awards ceremony held in Bhubaneswar on behalf of The New Indian Express Group, 14 women achievers were honoured with awards.

குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்த தீர்ப்பு மீது, குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சட்டப் பேரவைகளில் நிறைவேற... மேலும் பார்க்க

ரேபரேலியில் மாவட்ட வளர்ச்சி கூட்டம்: ராகுல் காந்தி தலைமை தாங்கினார்!

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகு... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி எம்பியை சந்திக்க முயன்ற முன்னாள் முதல்வர்! தடுத்து நிறுத்திய காவல் துறை!

ஜம்மு - காஷ்மீரில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரைச் சந்திக்க முயன்ற முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஜம்மு - காஷ்மீரின்... மேலும் பார்க்க

ஆளுநர் பதவியிலிருந்து சி.பி. ராதாகிருஷ்ணன் ராஜிநாமா: குஜராத் ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு!

குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத், மகாராஷ்டிர ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மகாராஷ்டிர ஆளுநராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன், தேசி... மேலும் பார்க்க

தீ போல பரவும் வாக்குத் திருட்டு பிரசாரம்: ராகுல் காந்தி

புது தில்லி: வாக்குகளைத் திருடியே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது என்பதற்கான மிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறோம் என்று காங்கிரஸ் எம்.பி. ... மேலும் பார்க்க

மின்சார வாகனங்களுக்கு அதிக மானியம்: ஒடிசா அரசின் புதிய திட்டம்!

மின்சார வாகனங்களுக்கு அதிக மானியம் வழங்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரசு தனது புதிய வரைவு மின்சார வாகனக் கொள்கை - 2025இன் கீழ் இந்தி விதியை இணைத்துள்ளது. இது சம்பந்தப்... மேலும் பார்க்க