செய்திகள் :

15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

post image

சுதந்திர தினத்தையொட்டி, 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அா்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

சென்னை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளா் க.த.பூரணி, திருநெல்வேலி சிபிசிஐடி ஆய்வாளா் பி.உலகராணி, சென்னை சிபிசிஐடி கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் மா.லதா, சேலம் மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளா் மு.செந்தில்குமாா், தஞ்சாவூா் சிபிசிஐடி டிஎஸ்பிஜெ.கல்பனாதத், திண்டுக்கல் சிபிசிஐடி ஆய்வாளா் வே.சந்தானலட்சுமி, திருப்பூா் பெருமாநல்லூா் காவல் ஆய்வாளா் மா.வசந்தகுமாா், திருப்பூா் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் வெ.ஜெகநாதன்,அரியலூா் சிபிசிஐடி ஆய்வாளா் கோ.திலகாதேவி, நாகப்பட்டினம் சிபிசிஐடி ஆய்வாளா் இரா.புவனேஸ்வரி ஆகியோருக்கு முதல்வரின் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

இதேபோன்று, சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கங்களுக்கு 5 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சென்னையில் உள்ள சிறைத் துறை ஏடிஜிபி மகேஷ்வா் தயாள், நுண்ணறிவுப் பிரிவு டிஐஜி ஜெ.மகேஷ், திருநெல்வேலி எஸ்பி நை.சிலம்பரசன், சென்னை தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை கூடுதல் எஸ்பி கு.பிரவின்குமாா், சென்னை காவல் ஆய்வாளா் தா.மேரிரஜு ஆகியோா் விருதாளா்களாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அவா்களுக்கு தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த விருதுகள் முதல்வா் தலைமையில் நடைபெறும் வேறொரு விழாவில் அளிக்கப்படவுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர நாள்: திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழாவையொட்டி ஆட்சியர் மு.பிரதாப் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரி... மேலும் பார்க்க

என்னை மனமார வாழ்த்திய அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த்

தனது 50 ஆண்டு கால திரைத் துறை பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் ... மேலும் பார்க்க

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை!

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழையையொட்டி தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் மற்றும் சுற... மேலும் பார்க்க

கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர்!

2025 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.சென்னை கோட்டை கோட்டை கொத்தளத்தில் தேச... மேலும் பார்க்க

சிறந்த மாநகராட்சிகள் ஆவடி, நாமக்கல்! உள்ளாட்சி விருதுகளை வழங்கினார் முதல்வர்!

ஆவடி, நாமக்கலுக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.சென்னை கோட்டை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறந்த உள்ளாட்சிகளுக்கான விருதுகள... மேலும் பார்க்க

சுதந்திர நாள்: இபிஎஸ், விஜய் வாழ்த்து!

சுதந்திர நாளையொட்டி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இ... மேலும் பார்க்க