செய்திகள் :

15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள்! ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்!

post image

தில்லியில் 15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள், அந்த சிறுவனின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு ரூ. 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று சிறுவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

வடக்கு தில்லி முகர்ஜி நகரைச் சேர்ந்த விகாஸ் கார்க் என்ற கார் ஓட்டுநரின் மகன் வைபவ் (வயது 15) காணாமல் போனதாக வஜிராபாத் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ​​ஜரோடா புஷ்தா சாலை அருகே வைபவ் மூன்று சிறுவர்களுடன் காணப்பட்ட சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் மூன்று சிறுவர்களையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பணத்துக்காக வைபவ்வை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை வைபவ்வை மூவரும் பைக்கில் சுற்ற அழைத்துச் சென்றுள்ளனர். பலஸ்வா ஏரிக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கத்திகளால் குத்திக் கொலை செய்துள்ளனர். உடலை அங்கேயே வீசிவிட்டு தப்பிய சிறுவர்கள், வைபவ்வின் தந்தையைத் தொடர்புகொண்டு ரூ. 10 லட்சம் கேட்டு திங்கள்கிழமை மிரட்டியுள்ளனர்.

இதனிடையே காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததில், சிறுவர்கள் வாக்குமூலம் அளித்த இடத்தில் இருந்து வைபவ்வின் உடலை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

மேலும், மூன்று சிறுவர்கள் மீது வழக்குப்பதிந்து காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய வழிபாட்டுத் தலங்களில் நாளைமுதல் மதுவிலக்கு அமல்! - எங்கே?

19 முக்கிய வழிபாட்டுத் தலங்களில் மதுவிலக்கு ஏப். 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.மத்திய பிரதேசத்தில் பிரசித்திபெற்ற 19 வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்லாது, அம... மேலும் பார்க்க

ரமலான் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தி முழக்கம்! வைரலாகும் விடியோ!

உத்தரப் பிரதேசத்தில் ரமலான் சிறப்புத் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தியவாறு இஸ்லாமியர்கள் முழக்கங்களை எழுப்பிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது மேலும் பார்க்க

ஏப்ரல் - ஜூன் வெப்ப அலையின் தாக்கம் எத்தனை நாள்கள்? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வெப்ப அலையின் தாக்கம் ஏப்ரல் - ஜூன் வரை அதிகமாக இருக்குமென்றும், நாடெங்கிலும் பரவலாக இயல்பைவிட வெய்யில் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) தெரிவித்துள்ளது.‘வெப்ப-அலை’ எனப்படும் ’வெய்... மேலும் பார்க்க

மோனலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பாலியல் புகாரில் கைது!

மகா கும்பமேளாவில் பிரபலமடைந்த மோனலிசா என்ற இளம்பெண்ணுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

இனி அபராதம் செலுத்தவில்லை எனில் ஓட்டுநர் உரிமம் ரத்து! - வருகிறது புதிய விதிகள்!!

சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை 3 மாதங்களுக்குள் செலுத்தவில்லை என்றால் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் புதிய விதிகளை மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலைகள... மேலும் பார்க்க

மோடி அரசால் வணிகமயமாகும் கல்வி முறை! -சோனியா காந்தி

புது தில்லி: மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ‘கல்வித்துறையில் அதிகாரம், வணிகமயமாக்கல், வகுப்புவாதம் (சென்ட்ரலைசேசன், கமர்சியலைசேசன... மேலும் பார்க்க