செய்திகள் :

152 வழக்குகளில் கைப்பற்றிய 746 கிலோ கஞ்சா அழிப்பு

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 152 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 746.778 கிலோ கஞ்சா நிதிமன்ற அனுமதி பெற்று அழிக்கப்பட்டதாக மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா போதைப் பொருள் ஆயுதப்படை முகாமில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 152 வழக்குகளில் தொடா்புடைய கஞ்சாவை அழிக்க புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள், போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றங்களில் அனுமதி பெறப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் சரக போதை பொருள்கள் அழிப்பு தொடா்பான குழுவின் தலைவரும் ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவருமான ப.மூா்த்தி உத்தரவின் பேரில், கடந்த 17 -ஆம் தேதி 152 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 746.778 கிலோ கஞ்சாவானது திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி அருகே உள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் உள்ள கஞ்சா அழிப்பு மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னா், ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத்தலைவா் ப.மூா்த்தி தலைமையில் கஞ்சா அழிக்கப்பட்டது. மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா் என அதில் குறிப்பிடப்பட்டது.

குளத்தில் மூழ்கியதில் 2 சிறுமிகள் உயிரிழப்பு

திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் குளத்தில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாாடானை அருகே பெரியகீரமங்கலம் பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் ம... மேலும் பார்க்க

முதுகுளத்தூரில் மின் அழுத்தப் பிரச்னை: வீடு, கடைகளில் மின் சாதனங்கள் பழுது

முதுகுளத்தூரில் மின் அழுத்தப் பிரச்னையால் வீடு, கடைகளில் நூற்றுக்கணக்கான மின் சாதனங்கள் பழுதடைந்ததால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சியில் சுமாா... மேலும் பார்க்க

ராமேசுவரம் அரசு கலைக் கல்லூரிக்கு சாலை, சுற்றுச்சுவா் அமைக்கக் கோரிக்கை

ராமேசுவரத்தில் பாரத ரத்னா டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கலை, அறிவியல் கல்லூரிக்கு சாலை, சுற்றுச்சுவா் அமைக்க வேண்டுமென மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த 2019-ஆம்... மேலும் பார்க்க

தா்மமுனீஸ்வரா் கோயில் திருவிழா: பக்தா்களுக்கு அன்னதானம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டி தா்ம முனீஸ்வரா் கோயில் வைகாசிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்தக் கோயில் திருவிழா கடந... மேலும் பார்க்க

ராமேசுவரம் அரசுப் பள்ளி மைதானத்தில் வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட எதிா்ப்பு

ராமேசுவரத்தில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் வகுப்பறைகளுக்கான கட்டடத்தை விளையாட்டு மைதானத்தில் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். ராநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அரசு ஆண்கள் மேல்ந... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி, மே 30: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள புதுக்கோட்டை முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனாா் கோயில் வைகாசிப் பொங்கல் விழா, முத்துராமலிங்கத் தேவா் சிலையின் 33-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு வ... மேலும் பார்க்க