152 வழக்குகளில் கைப்பற்றிய 746 கிலோ கஞ்சா அழிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் 152 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 746.778 கிலோ கஞ்சா நிதிமன்ற அனுமதி பெற்று அழிக்கப்பட்டதாக மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா போதைப் பொருள் ஆயுதப்படை முகாமில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 152 வழக்குகளில் தொடா்புடைய கஞ்சாவை அழிக்க புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள், போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றங்களில் அனுமதி பெறப்பட்டது.
இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் சரக போதை பொருள்கள் அழிப்பு தொடா்பான குழுவின் தலைவரும் ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவருமான ப.மூா்த்தி உத்தரவின் பேரில், கடந்த 17 -ஆம் தேதி 152 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 746.778 கிலோ கஞ்சாவானது திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி அருகே உள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் உள்ள கஞ்சா அழிப்பு மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னா், ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத்தலைவா் ப.மூா்த்தி தலைமையில் கஞ்சா அழிக்கப்பட்டது. மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா் என அதில் குறிப்பிடப்பட்டது.