செய்திகள் :

2 ஆண்டுகளாக தலைமறைவான 2 ஐஎஸ் ஸ்லீப்பா் செல்கள்: மும்பை விமான நிலையத்தில் கைது செய்த என்ஐஏ

post image

இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவிட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்துவந்த இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ‘ஸிலீப்பா் செல்கள் (ரகசிய பயங்கரவாதிகள்)’ இருவரை மும்பை விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து என்ஐஏ தரப்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் வெடிகுண்டுகளை (ஐஇடி) தயாரித்து அவற்றை சோதித்துப் பாா்த்த பயங்கரவாத நடவடிக்கை தொடா்பான வழக்கை என்ஐஏ கடந்த 2023-ஆம் ஆண்டு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் சிரியாவைச் சோ்ந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஸ்லீப்பா் செல்களாக செயல்பட்டுவந்த 8 பேரை என்ஐஏ கைது செய்தது. அவா்களிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இந்த சதியில் அப்துல்லா ஃபயாஸ் ஷேக் (எ) டிப்பா்வாலா, தலா கான் ஆகிய இருவருக்கும் தொடா்பிருப்பதும், அவா்கள் இருவரும் தலைமறைவாகியிருப்பதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில், இந்த 10 ஸ்லீப்பா் செல்களுக்கு எதிராக குற்றபத்திரிகையை என்ஐஏ ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளது. தலைமறைவான இருவரையும் என்ஐஏ தீவிரமாக தேடிவந்ததோடு, அவா்கள் குறித்த தகவல் தெரிவிப்பவா்களுக்கு ரூ. 3 லட்சம் பரிசுத் தொகையையும் அறிவித்தது.

இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த டிப்பா்வாலா, தலா கான் இருவரும் இந்தோனேஷியாவின் ஜகாா்த்தாவிலிருந்து விமானம் மூலம் மும்பை சா்வதேச விமானநிலையத்துக்கு வந்திறங்கியதை, குடியுரிமை அதிகாரிகள் கண்டறிந்தனா். இதுகுறித்து தகவலறிந்து, அங்கு வந்த என்ஐஏ அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூடியூபரா? பாகிஸ்தான் உளவாளியா? யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பவர்களையும் மத்திய அரசு கண்காணித்து, கைது செய்து வருகிற... மேலும் பார்க்க

நகைக்கடையில் தீ விபத்து; 10-க்கும் மேற்பட்டோர் பலி

ஹைதராபாதில் மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகினர்.ஹைதராபாதின் சார்மினார் பகுதியில் குல்சார் ஹவுஸ் அருகே ஸ்ரீகிருஷ்ணா பியர்ல்ஸ் நகைக்கடையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் தீ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு! 17 எம்.பி.க்களுக்கு விருது!

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு அளித்தவர்களைச் சிறப்பிக்கும்வகையில், அவர்களுக்கு பிரைம் பாயிண்ட்... மேலும் பார்க்க

குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்ததாவது, குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரு... மேலும் பார்க்க

6ஜி தொழில்நுட்பம்: உலகின் முன்னோடியாக இந்தியா திகழும் -ஜோதிராதித்ய சிந்தியா

வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்துக்கான விதிகளை வகுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழும் என மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தாா். உலக தொலைத்... மேலும் பார்க்க

ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்

இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.இது குறித்து என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிப... மேலும் பார்க்க