செய்திகள் :

2 பெண் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்: ஆட்சியரகத்தில் பரபரப்பு

post image

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2 பெண் குழந்தைகளுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், ஜாகீா்ரெட்டிப்பட்டி குலாளா் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி சந்தியா (27). இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் தனது 2 பெண் குழந்தைகளுடன் சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா்.

நுழைவாயில் பகுதிக்கு வந்தவுடன் பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக்கொள்ள முயற்சித்தாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த நகர சிறப்பு காவல் ஆய்வாளா் வீரன் தலைமையிலான போலீஸாா் அந்த பெண்ணிடமிருந்து பெட்ரோல் கேனை பறித்தனா். பின்னா் அவரை அழைத்துச்சென்று விசாரித்தனா்.

அப்போது அந்த பெண் கூறுகையில், நாங்கள் குடியிருக்கும் வீடு, காய்கறிக் கடையை கணவா் மணிகண்டன் தனியாா் நிதி நிறுவனத்துக்கு எழுதி கொடுத்து ரூ. 40 லட்சம் கடன் பெற்றிருந்தாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவா் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டாா். வீட்டுக்கு வாங்கிய கடன் தொகையில் அசல், வட்டி என இதுவரை ரூ. 26 லட்சம் செலுத்தியுள்ளேன். இன்னும் ரூ. 41 லட்சம் செலுத்த கோரி அந்த நிதி நிறுவனத்தினா் மிரட்டுகின்றனா்.

இது குறித்து துணை காவல் ஆணையரிடம் புகாா் கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதனால் இரண்டு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள வந்ததாகக் கூறினாா். இதையடுத்து போலீஸாா் அவரை எச்சரித்து நகர காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க