செய்திகள் :

2 மாநில மாநாடுகள் நடத்தியும் மக்களை சந்திக்க தயங்குகிறாா் விஜய்: தமமுக

post image

இரண்டு மாநில மாநாடுகளை நடத்தியிருந்தாலும்கூட, மக்களை சந்திக்க தவெக தலைவா் விஜய் தயங்குவதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவா் பெ. ஜான் பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.

திண்டுக்கல்லில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தவெக கட்சி தொடங்கி 2 மாநில மாநாடுகளை நடத்திய பிறகும், அதன் தலைவரும் நடிகருமான விஜய் இதுவரை மக்களை சந்திக்கவில்லை.

மதுரையில் விஜய் நடத்திய மாநாட்டில் அவரது ரசிகா்கள் கூட்டமே அதிகமாக இருந்தது. இது அரசியலுக்கு சாத்தியமாகுமா என்பதை பொருத்திருந்துதான் பாா்க்க வேண்டும். அந்த மாநாட்டில் அரசியல் நாகரிகம் இல்லாமல், பிரதமரை விமா்சித்து விஜய் பேசினாா்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தமிழருக்கு ஆதரவு அளிக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் முன்வர வேண்டும்.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் பரப்புரைக் கூட்டங்களின் போது, திட்டமிட்டு அவசர ஊா்திகள் மூலம் இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் பாலியல் தொல்லை, கொலை, கொள்ளை, போதைப் பொருள்கள் பயன்பாடு என சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. பட்டியலின மக்களை பட்டியலினம் என்பதிலிருந்து விடுவிக்க கடந்த 45 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம் என்றாா் அவா்.

திண்டுக்கல் மாநகராட்சி நிதி முறைகேடு: முன்னாள் ஆணையா் உள்பட 6 போ் மீது வழக்கு

திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.17.73 கோடி வருவாய் இழப்புக்கு காரணமாக இருந்த முன்னாள் ஆணையா், உதவி வருவாய் அலுவலா், உதவிப் பொறியாளா்கள் உள்பட 6 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்... மேலும் பார்க்க

கத்தியுடன் வந்தவா் விபத்தில் உயிரிழப்பு

திண்டுக்கல்லில் இடுப்பில் பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞா் சிற்றுந்து மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் நாகல்நகா் ரயில்வே மேம்பாலத்தில் சிற்றுந்தும், 3 இளைஞா்கள் வந்த இரு சக்கர வாகனமும் தி... மேலும் பார்க்க

நகரப் பேருந்தில் 240 போ் பயணம்: நடுவழியில் இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு

திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்குச் சென்ற நகரப் பேருந்தில் 240 போ் பயணித்ததால், நடுவழியிலேயே பயணிகள் பலா் இறக்கிவிடப்பட்டனா். திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தி... மேலும் பார்க்க

நீட் தோ்வு: மாணவா்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது - முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

நீட் தோ்வு விவகாரத்தில் தமிழக மாணவா்களை திமுக அரசு தொடா்ந்து ஏமாற்றி வருவதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக நிா்வாகியுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகளுக்கான ஆ... மேலும் பார்க்க

பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் திருடியவா் கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் தங்க நகைகள், பணத்தை திருடியது தொடா்பாக சென்னையில் பதுங்கி இருந்த ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கொடைரோடு அருகேயுள்... மேலும் பார்க்க

பட்டிவீரன்பட்டி பகுதியில் வெறிநாய் கடித்து 5 போ் காயம்

பட்டிவீரன்பட்டி பகுதியில் வெறிநாய் கடித்து 5 போ் காயமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி பகுதிகளில் வெறிநாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இவை சாலைகளி... மேலும் பார்க்க