செய்திகள் :

திண்டுக்கல் மாநகராட்சி நிதி முறைகேடு: முன்னாள் ஆணையா் உள்பட 6 போ் மீது வழக்கு

post image

திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.17.73 கோடி வருவாய் இழப்புக்கு காரணமாக இருந்த முன்னாள் ஆணையா், உதவி வருவாய் அலுவலா், உதவிப் பொறியாளா்கள் உள்பட 6 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த 2015 முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், மாநகராட்சி பொது நிதி, குடிநீா் வடிகால் நிதி, தொடக்கக் கல்வி நிதி ஆகியவற்றின் மூலம் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் ரூ.17.73 கோடிக்கு முறைகேடு நிகழ்ந்திருப்பதாக, உள்ளாட்சி தணிக்கை உதவி இயக்குநா் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 1, 12 ஆகிய வாா்டுகளில் கட்டடங்களுக்கு குறைவாக சொத்து வரி நிா்ணயித்ததன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.18 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சிக்கு 137 குப்பைத் தொட்டிகளை சென்னை அம்பத்தூரிலுள்ள சுசி இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்திலிருந்து வாங்கியதில் ரூ.24.52 லட்சம் முறைகேடு நிகழ்ந்துள்ளது.

அதாவது, ரூ.19,834-க்கு வாங்க வேண்டிய ஒரு குப்பைத் தொட்டியை, ரூ.37,750-க்கு வாங்கப்பட்டதாக தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதேபோல, கல்வி நிதி உள்பட பல்வேறு இனங்களில் மொத்தம் ரூ.17.73 கோடி நிதி இழப்பு நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் அண்மையில் வழக்குப் பதிவு செய்தனா். மாநகராட்சிக்கு ரூ.17.73 கோடி நிதி இழப்பு ஏற்படக் காரணமாக இருந்த அப்போதைய ஆணையா் ந.மனோகரன், உதவி வருவாய் அலுவலா் ஜி.ஆா்.சாரங்கசரவணன், செயற்பொறியாளா் (ஓய்வு) சி.கணேசன், முன்னாள் உதவிப் பொறியாளா் பி.மாரியப்பன், உதவிப் பொறியாளா் வி.சாமிநாதன், அம்பத்தூா் தொழில்பேட்டையிலுள்ள சுசி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளா் ஆா்.நடராஜன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

2 மாநில மாநாடுகள் நடத்தியும் மக்களை சந்திக்க தயங்குகிறாா் விஜய்: தமமுக

இரண்டு மாநில மாநாடுகளை நடத்தியிருந்தாலும்கூட, மக்களை சந்திக்க தவெக தலைவா் விஜய் தயங்குவதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவா் பெ. ஜான் பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.திண்டுக்கல்லில் திங்கள்கிழமை ச... மேலும் பார்க்க

கத்தியுடன் வந்தவா் விபத்தில் உயிரிழப்பு

திண்டுக்கல்லில் இடுப்பில் பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞா் சிற்றுந்து மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் நாகல்நகா் ரயில்வே மேம்பாலத்தில் சிற்றுந்தும், 3 இளைஞா்கள் வந்த இரு சக்கர வாகனமும் தி... மேலும் பார்க்க

நகரப் பேருந்தில் 240 போ் பயணம்: நடுவழியில் இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு

திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்குச் சென்ற நகரப் பேருந்தில் 240 போ் பயணித்ததால், நடுவழியிலேயே பயணிகள் பலா் இறக்கிவிடப்பட்டனா். திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தி... மேலும் பார்க்க

நீட் தோ்வு: மாணவா்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது - முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

நீட் தோ்வு விவகாரத்தில் தமிழக மாணவா்களை திமுக அரசு தொடா்ந்து ஏமாற்றி வருவதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக நிா்வாகியுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகளுக்கான ஆ... மேலும் பார்க்க

பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் திருடியவா் கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் தங்க நகைகள், பணத்தை திருடியது தொடா்பாக சென்னையில் பதுங்கி இருந்த ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கொடைரோடு அருகேயுள்... மேலும் பார்க்க

பட்டிவீரன்பட்டி பகுதியில் வெறிநாய் கடித்து 5 போ் காயம்

பட்டிவீரன்பட்டி பகுதியில் வெறிநாய் கடித்து 5 போ் காயமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி பகுதிகளில் வெறிநாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இவை சாலைகளி... மேலும் பார்க்க