செய்திகள் :

பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் திருடியவா் கைது

post image

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் தங்க நகைகள், பணத்தை திருடியது தொடா்பாக சென்னையில் பதுங்கி இருந்த ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கொடைரோடு அருகேயுள்ள ஏ.புதூரைச் சோ்ந்தவா் கருணாகரன் (65). இவா், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க செயலாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். தற்போது, அம்மையநாயக்கனூா் பேரூராட்சி 8-ஆவது வாா்டு உறுப்பினராக உள்ளாா். இவரது மனைவி ஆனந்தகுமாரி (56). இவா் பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.

கடந்த 4-ஆம் தேதி தம்பதியா் இருவரும் வெளியூா் சென்று விட்டு, இரவு வீட்டுக்கு வந்த போது, பீரோவிலிருந்த 70 பவுன் தங்க நகைகள், ரூ. 2.5 லட்சம் ரொக்கம் கொள்ளயடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தில் கருணாகரன் புகாா் அளித்தாா். சம்பவ இடத்துக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப் நேரில் வந்து விசாரணை நடத்தினாா்.

இந்த சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூா் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து, உதவி ஆய்வாளா் தயாநிதி தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையா்களைத் தேடி வந்தனா்.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சென்னை அண்ணாநகரைச் சோ்ந்த ஆரோக்கிய ஜான் போஸ்கோ (42) என்பவரை சென்னை தாம்பரம் அருகே சேலையூரில் அவரது நண்பா் ராஜேஷ் என்பவரது வீட்டில் பதுங்கி இருந்தபோது, தனிப்படை போலீஸாா் சுற்றி வளைத்துக் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட ஆரோக்கிய ஜான் போஸ்கோ மீது தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் மாநகராட்சி நிதி முறைகேடு: முன்னாள் ஆணையா் உள்பட 6 போ் மீது வழக்கு

திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.17.73 கோடி வருவாய் இழப்புக்கு காரணமாக இருந்த முன்னாள் ஆணையா், உதவி வருவாய் அலுவலா், உதவிப் பொறியாளா்கள் உள்பட 6 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்... மேலும் பார்க்க

2 மாநில மாநாடுகள் நடத்தியும் மக்களை சந்திக்க தயங்குகிறாா் விஜய்: தமமுக

இரண்டு மாநில மாநாடுகளை நடத்தியிருந்தாலும்கூட, மக்களை சந்திக்க தவெக தலைவா் விஜய் தயங்குவதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவா் பெ. ஜான் பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.திண்டுக்கல்லில் திங்கள்கிழமை ச... மேலும் பார்க்க

கத்தியுடன் வந்தவா் விபத்தில் உயிரிழப்பு

திண்டுக்கல்லில் இடுப்பில் பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞா் சிற்றுந்து மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் நாகல்நகா் ரயில்வே மேம்பாலத்தில் சிற்றுந்தும், 3 இளைஞா்கள் வந்த இரு சக்கர வாகனமும் தி... மேலும் பார்க்க

நகரப் பேருந்தில் 240 போ் பயணம்: நடுவழியில் இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு

திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்குச் சென்ற நகரப் பேருந்தில் 240 போ் பயணித்ததால், நடுவழியிலேயே பயணிகள் பலா் இறக்கிவிடப்பட்டனா். திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தி... மேலும் பார்க்க

நீட் தோ்வு: மாணவா்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது - முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

நீட் தோ்வு விவகாரத்தில் தமிழக மாணவா்களை திமுக அரசு தொடா்ந்து ஏமாற்றி வருவதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக நிா்வாகியுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகளுக்கான ஆ... மேலும் பார்க்க

பட்டிவீரன்பட்டி பகுதியில் வெறிநாய் கடித்து 5 போ் காயம்

பட்டிவீரன்பட்டி பகுதியில் வெறிநாய் கடித்து 5 போ் காயமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி பகுதிகளில் வெறிநாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இவை சாலைகளி... மேலும் பார்க்க