செய்திகள் :

2 முதல்வர்கள் கைதில் பங்கு வகித்த அமலாக்கத் துறை அதிகாரி 45 வயதில் ராஜினாமா; ரிலையன்ஸில் பணி!

post image

முன்னாள் அமலாக்கத் துறை அதிகாரி, இந்நாள் ரிலையன்ஸ் நிறுவன பணியாளர் கபில் ராஜ் சமீபத்திய முக்கிய செய்தி.

யார் இந்த கபில் ராஜ்?

2009-ம் பேட்ச் அதிகாரியான கபில் ராஜ், இந்திய வருவாய் துறையில் முன்னர் பணிபுரிந்து வந்தார்.

பின்னர், அமலாக்கத்துறையின் இணை இயக்குநராக பணியாற்றினார்.

இவர் அமலாக்கத்துறையில் இருந்தப் போது டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்காண்டின் முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

ராஜினாமா

இவர் கடந்த 17-ம் தேதி, ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவில், தான் வகித்து வந்த கூடுதல் கமிஷனர் பதிவை ராஜினாமா செய்தார்.

16 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவரும், இரு முதலமைச்சர்களின் கைதில் முக்கிய பங்காற்றிய கபில் ராஜ், தனது 45 வயதில் அரசு அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார்.

தனிப்பட்ட காரணங்களே இவரது ராஜினாமாவிற்கு காரணம் என்று கூறப்பட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோத...
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோத...

ரிலையன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்

தற்போது இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக சேர்ந்துள்ளார். அரசு அதிகாரி ஒருவர் கார்ப்பரேட் நிறுவனத்தில் சேருவது புதிதல்ல.

ரிலையன்ஸ் நிறுவனத்திலேயே மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் கே.வி.சௌத்ரி பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

``திராவிட மாடல் 2.0; நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்'' - மு.க.ஸ்டாலின்

தாம்பரத்தில் இன்று மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திறப்பு விழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். பட்டா வழங்கும் விழாவில்... மேலும் பார்க்க

``சாலை ஓரத்தில் அல்ல; பட்டா நிலத்தில் மட்டுமே கட்சி கொடி கம்பங்கள்'' - குமரியை பின்பற்றுமா தமிழகம்?

தமிழ்நாடு முழுவதும் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்கள், சாதி கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

Doctor Vikatan: திடீரென ஆரம்பித்திருக்கும் தூக்கமின்மை பிரச்னை; தொடருமா, சரியாகிவிடுமா?

Doctor Vikatan: என் வயது 47. எனக்கு கடந்த 2-3 வாரங்களாகவே சரியான தூக்கமில்லை. வாரத்தில் ஒன்றிரண்டு நாள்கள்தூக்கமின்மையால் மிகவும் அவதிப்படுகிறேன். இன்று பலரும் தூக்கமின்மையால் அவதிப்படுவதைக் கேள்விப்ப... மேலும் பார்க்க

Sugar Detox: யார், எப்படி செய்யலாம்? நன்மைகள் என்ன? டயபடீஸ் இருப்பவர்களும் செய்யலாமா?

முன்பெல்லாம் சர்க்கரை நோயாளிகள்தான் ‘சர்க்கரையில்லா’ வாழ்க்கையை மேற்கொள்வார்கள். இன்றைக்கு `டயட்’ என்ற பெயரில் சாதாரணர்களும் சர்க்கரையை ஒதுக்கத் தொடங்கிவிட்டார்கள். இதற்குக் காரணம், `வெள்ளை உணவுகளைப் ... மேலும் பார்க்க

US tariffs: ``ஒரு அங்குலம் இடம் கொடுத்தால், ஒரு மைல் தூரம் செல்வான்'' - சீன தூதர் சு ஃபெய்ஹாங் பதிவு

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகளுக்காக இந்தியா மீது 50 சதவிகித வரியையும், அபராதத்தையும் விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் என்ன பேசினார்? இப்படி ட்ரம்ப் வரிகளைக் காட்டி... மேலும் பார்க்க

US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என்ன பேசினார்கள்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரியும், அபராதமும் விதித்துள்ளார். இதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே - 'ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்கிறது' என்பது தான். அப்படி ரஷ்யா... மேலும் பார்க்க