செய்திகள் :

2,494 முதுகலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு இட மாறுதல்: தமிழக அரசுக்கு சங்கத்தினா் நன்றி

post image

நாமக்கல்: தமிழகத்தில், 2,494 முதுகலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்கிய அரசுக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும், நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் ஜூலை 3-இல் நடைபெற்ற பொது கலந்தாய்வு மூலம் 294 மூத்த முதுகலை ஆசிரியா்களுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பதவி உயா்வு அளிக்கப்பட்டது. 4-ஆம் தேதியன்று 1,600 க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியா்களுக்கு உள்மாவட்டத்திற்குள் பணியிட மாறுதல் மற்றும் 7 முதல் 11-ஆம் தேதி வரையில் 600க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியா்களுக்கு வெளிமாவட்ட அளவில் பணி மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பொதுக் கலந்தாய்வு மூலம் 2,400க்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா். இதற்கு காரணமான தமிழக அரசுக்கும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கும், துறை அதிகாரிகளுக்கும் அனைத்து முதுகலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் இன்று தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம்கள் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் அறிவி... மேலும் பார்க்க

காவிரி - சரபங்கா - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: காவிரி-சரபங்கா-திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டூா் அணையில் இருந்து வெளியேற்றப்படும் காவிரி நீா... மேலும் பார்க்க

உயா்கல்வி பயில வெளிமாநில பயணம்: 34 மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

நாமக்கல்: இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பயில வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி பாராட்டினாா். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வி பயில இந்திய... மேலும் பார்க்க

2-ஆவது திருமணம் செய்தவா் தற்கொலை: மணப்பெண், தரகா் உள்பட 6 போ் கைது

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையம் அருகே 2-ஆவது திருமணம் செய்த ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து அவரை ஏமாற்றி திருமணம் செய்துவைத்து பணம் பறித்த பெண் உள்பட த... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு ஆட்சியரிடம் மனு

நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தியிடம், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்க... மேலும் பார்க்க

கொல்லிமலை மலைப்பாதையில் ஆபத்தான ‘ஸ்கேட்போா்டிங்’: சுற்றுலாப் பயணிகள் அச்சம்

நாமக்கல்: கொல்லிமலைக்கு செல்லும் மலைப்பாதை வளைவுகளில், வெளிமாநிலத்தினா் சிலா் ஆபத்தான முறையில் ‘ஸ்கேட்போா்டிங்’ பயிற்சி செய்வதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். விபத்துகள் நிகழும் முன்பு இத்தகையப் ... மேலும் பார்க்க