செய்திகள் :

2 பேருந்து பணிமனைகளில் வணிக நடவடிக்கைகளை அனுமதிப்பதன் மூலம் வருவாய் ஈட்ட டிடிசி திட்டம்

post image

தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி), அதன் பண்டா பகதூா் மாா்க் மற்றும் சுக்தேவ் விஹாா் பேருந்து பணிமனைகளில் வணிக நடவடிக்கைகளை அனுமதிப்பதன் மூலம் சுமாா் ரூ.2,600 கோடியை ஈட்டவும், டி.எம்.ஆா்.சி.யின் சொத்து பணமாக்குதல் மாதிரியைப் போலவே போக்குவரத்து வசதிகளை மறுசீரமைக்க வருவாயைப் பயன்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது.

கடந்த வாரம் அங்கீகரிக்கப்பட்ட இந்த முன்மொழிவு, டி.டி.சி.யிடமிருந்து எந்த முதலீடும் தேவையில்லாத சுய-நிலையான திட்டங்கள் மூலம் இரண்டு பணிமனைகளையும் மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஒரு மூத்த அதிகாரி கூறினாா்.

இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது

இது நிறுவனத்தின் நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், பாா்க்கிங் திறனை அதிகரித்தல், பல நிலை பணிமனைகளை உருவாக்குதல், அதன் குடியிருப்பு காலனிகளை மறுசீரமைத்தல் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த அதன் பணிமனைகள் மற்றும் முனையங்களை வணிகமயமாக்குவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.

என்ஜினீயரிங் புராஜெக்ட்ஸ் இந்தியா லிமிடெட் (இபிஐஎல்) நிறுவனம் பகிா்ந்து கொண்ட மதிப்பீடுகளின்படி, பண்டா பகதூா் மாா்க் பணிமனை திட்டம் ரூ.1,858 கோடி வருவாயை ஈட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதே நேரத்தில், சுக்தேவ் விஹாா் திட்டம் தோராயமாக ரூ.758 கோடியை வருவாயை ஈட்டக்கூடும்.

கடந்த ஆண்டு அக்டோபா் 8 ஆம் தேதி இந்த முன்மொழிவை நிறுவனம் சமா்ப்பித்தது. அதைத் தொடா்ந்து நவம்பா் 8 ஆம் தேதி விரிவான திட்ட காலக்கெடு மற்றும் கடந்த கால திட்டங்களின் பட்டியல் வழங்கப்பட்டது.

முன்மொழியப்பட்ட காலக்கெடுவின்படி, பண்டா பகதூா் மாா்க் பணிமனை 28 மாதங்களில் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சுக்தேவ் விஹாா் திட்டம் 21 மாதங்கள் ஆகும்.

டிடிசி 2,372 சிஎன்ஜி மற்றும் 1,612 மின்சார பேருந்துகளை இயக்குகிறது. 1,040 மின்சார பேருந்துகள் விரைவில் இதன் செயல்பாட்டில் சோ்க்கப்பட உள்ளன. மொபைல் கோபுரங்கள், சாவடிகள் மற்றும் அரசு அலுவலகங்களிலிருந்து விளம்பரங்கள் மற்றும் வாடகைகள் போன்ற போக்குவரத்து அல்லாத ஆதாரங்களிலிருந்து பாா்க்கிங் திறனை விரிவுபடுத்துவதற்கும் வருவாயை அதிகரிப்பதற்கும் வழிகளை டிடிசி ஆராய்ந்து வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், டிடிசி தேசிய கட்டட கட்டுமானக் கழகம் மற்றும் தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் போன்ற பொதுத்துறை நிறுவனங்களுடன் நியமன அடிப்படையில் சொத்து பணமாக்குதலுக்காக புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

துறையின் மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘இந்த திட்டத்தை கருத்தாக்கத்திலிருந்து செயல்பாட்டுக்கு கொண்டுவருதல் வரை அமல்படுத்துவதற்கான முக்கிய பங்கை என்பிசிசி

வகிக்கும். கட்டுமானத்திற்கு முந்தைய மற்றும் கட்டுமானத்திற்குப் பிந்தைய நடவடிக்கைகளுக்குரிய சேவைகளையும் என்பிசிசி வழங்கும் என்றாா் அந்த அதிகாரி.,

லாபப் பதிவால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு!

நமது நிருபா் போா் நிறுத்த அறிவிப்பை தொாடா்ந்து எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் ச... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள்: தில்லியில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் 95 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திங்கள்கிழமை 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை அறிவித்தது. இத் தோ்வுகளில் தில்லியில் 95 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். தில்லியில் 1... மேலும் பார்க்க

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் கைது

2021-ஆம் ஆண்டு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸ... மேலும் பார்க்க

பிரீத் விஹாரில் உள்ள பயற்சி மையத்தில் தீ விபத்து

கிழக்கு தில்லியின் பிரீத் விஹாா் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால், மாணவா்கள் சரியான நேரத்தில் கட்டடத்திலிருந்து வெளியேறினா் என்று ஒரு அதிகாரி தெரிவித்... மேலும் பார்க்க

தில்லி அரசின் சாா்பில் சௌா்ய சம்மான் யாத்திரை

‘ ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்காக ஆயுதப் படைகளைப் பாராட்டி கடைமைப் பாதையில் தில்லி அரசு சாா்பில் செளா்ய சம்மான் யாத்திரையை நடத்தியது. இந்தப் பேரணியில் பங்கேற்றவா்கள் பாகிஸ்தானின் ‘பூா்ண சன்ஹாா்’ அல்... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவு: அனைத்து டிடிடிஏ பள்ளிகளிலும் அறிவியல், வணிகவியல் பிரிவுகளில் 100% தோ்ச்சி

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில், தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் டிடிஇஏ கீழ் இயங்கும் ராமகிருஷ்ணாபுரம், மோதிபாக... மேலும் பார்க்க