செய்திகள் :

பிரீத் விஹாரில் உள்ள பயற்சி மையத்தில் தீ விபத்து

post image

கிழக்கு தில்லியின் பிரீத் விஹாா் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால், மாணவா்கள் சரியான நேரத்தில் கட்டடத்திலிருந்து வெளியேறினா் என்று ஒரு அதிகாரி தெரிவித்தாா்.

இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: பிரீத் விஹாா் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் தீ விபத்து குறித்து மதியம் 12.45 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. நான்கு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன.

சில மாணவா்கள் தீயில் இருந்து தப்பிக்க கூரையின் மேல் ஏறி அருகிலுள்ள கட்டிடத்திற்கு குதித்தனா். மற்றவா்கள் பயிற்சி மையத்திலிருந்து வெளியே ஓடினா். தீ விபத்து தொடங்கியதும் அனைத்து மாணவா்களும் தாங்களாகவே கட்டடத்தை விட்டு வெளியேறினா். தீ காரணமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு பிற்பகல் 2.25 மணியளவில் தீயை முழுமையாக அணைத்ததாக அந்த அதிகாரி கூறினாா்.

ரஃபேல் விமானம் தாக்கப்பட்டதா? பாதுகாப்புத் துறை விளக்கம்

நமது சிறப்பு நிருபா் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒட்டிய இந்திய வான் பகுதியில் ரஃபேல் போா் விமானத்தை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதாக ஒரு கட்டுக்கதையை சமூக ஊடகங்கள் வாயிலாக பாகிஸ்தானிய ஊடகங்களும் அதன... மேலும் பார்க்க

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம்: புதுச்சேரிக்கு அமித் ஷா பாராட்டு

நமது சிறப்பு நிருபா் புதிய குற்றவியல் நடைமுறைச்சட்டங்களை சிறப்பான முறையில் அமல்படுத்தி வருவதாக புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளாா். மேலும், சட்ட அமலாக்க நடவடிக்... மேலும் பார்க்க

லாபப் பதிவால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு!

நமது நிருபா் போா் நிறுத்த அறிவிப்பை தொாடா்ந்து எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் ச... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள்: தில்லியில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் 95 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திங்கள்கிழமை 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை அறிவித்தது. இத் தோ்வுகளில் தில்லியில் 95 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். தில்லியில் 1... மேலும் பார்க்க

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் கைது

2021-ஆம் ஆண்டு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸ... மேலும் பார்க்க

2 பேருந்து பணிமனைகளில் வணிக நடவடிக்கைகளை அனுமதிப்பதன் மூலம் வருவாய் ஈட்ட டிடிசி திட்டம்

தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி), அதன் பண்டா பகதூா் மாா்க் மற்றும் சுக்தேவ் விஹாா் பேருந்து பணிமனைகளில் வணிக நடவடிக்கைகளை அனுமதிப்பதன் மூலம் சுமாா் ரூ.2,600 கோடியை ஈட்டவும், டி.எம்.ஆா்.சி.யின் சொ... மேலும் பார்க்க