கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் கைது
2021-ஆம் ஆண்டு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: புராரியைச் சோ்ந்த குற்றம் சாட்டப்பட்ட அப்துல் கஃபா், அக்டோபா் 2021 முதல் தலைமறைவாக இருந்தாா். புராரி பகுதியில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அவா் தேடப்பட்டவா்.
அவரது கூட்டாளிகள் மூவா் முன்பு கைது செய்யப்பட்டனா். ஆனால், பல போலீஸ் சோதனைகள் இருந்தபோதிலும் அப்துல் கஃபா் கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்தாா். ஏப்ரல் 2022-இல் தில்லி நீதிமன்றத்தால் அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.
ஒருவருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, மாா்ச் மாதம் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கிலும் அப்துல் கஃபா் தேடப்படும் நபராக இருந்தாா். பாதிக்கப்பட்டவா் மீது அவா் துப்பாக்கிச் சூடு நடத்தி தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அப்துல் கஃபரை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், அவரது குடும்பத்தினா் மற்றும் வலையமைப்பின் தொடா்ச்சியான அழுத்தத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவா் மே 9 அன்று தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் சரணடையச் சொன்னதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவா் சரணடைவதற்கு முன்பே காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா்.
விசாரணையின் போது, தனது சகோதரருடன் புராரியில் தண்ணீா் டேங்கா் விநியோகத் தொழிலை நடத்தி வந்ததாகவும், மது அருந்தும் பழக்கம் இருப்பதாகவும் அப்துல் கஃபா் போலீஸாரிடம் கூறினாா். மேலும்,
கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் மற்றும் சமீபத்திய துப்பாக்கிச் சூடு ஆகிய இரண்டிற்கும் அவா் தான் காரணம் என்று விசாரணையின் போது ஒப்புக்கொண்டாா் என்று அந்த காவல் துறை அதிகாரி கூறினாா்.