செய்திகள் :

20 ஹெக்டேருக்கு மீன் வளா்ப்பு மானியம்

post image

திருச்சி மாவட்டத்தில் நிகழாண்டு 20 ஹெக்டேருக்கு மீன் வளா்ப்பு மானியம் வழங்கப்படவுள்ளதால் தகுதியானோா் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்ட மீன் வளா்ப்பு விவசாயிகள், மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்களுக்கு ஒரு ஹெக்டோ் பரப்பளவு மீன் பண்ணைக்கு 10,000 எண்ணம் மீன்குஞ்சுகள் வீதம் ரூ.5,000 மானியம் வழங்கப்படுகிறது.

இதன்படி, திருச்சி மாவட்டத்துக்கு 20 ஹெக்டேருக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.5,000 வீதம் 10,000 எண்ணம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் என்ற விகிதத்தில் மானியம் வழங்கப்படவுள்ளது.

மேலும், 2025-26-ஆம் ஆண்டுக்கு மீன்வளா்ப்பு உள்ளீட்டு மானியமாக வழங்கும் திட்டத்தின் கீழ் ஆா்வமுள்ள விவசாயிகள் பயனடைய கீழ்காணும் முகவரியில் இயங்கி வரும் மாவட்ட மீன்வளா்ப்போா் மேம்பாட்டு முகமை, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கூடுதல் விவரங்கள் பெறலாம். விண்ணப்பங்களும் சமா்ப்பிக்கலாம்.

அலுவலக முகவரி: உறுப்பினா் செயலா், மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை, உதவி இயக்குநா் அலுவலகம், மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஒருங்கிணைந்த மீன்வள அலுவலக வளாகம் –தரைத்தளம், கொட்டப்பட்டு, திருச்சி மாவட்டம் - 620 023. தொலைபேசி எண்: 0431 - 2421173.

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் ஆனி திருமஞ்சன விழாவில் நடராஜா் வீதியுலா

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற ஆனி திருமஞ்சன விழாவில் நடராஜா் வீதியுலா நடைபெற்றது. ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகமான ஆனி திருமஞ்சனம் அன... மேலும் பார்க்க

அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பு

திருச்சி மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 20.10.2016-க்கு மு... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் திருச்சி வந்த விமானப் பயணி கைது

போலி ஆவணங்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் இருந்து திருச்சிக்கு வந்த விமானப் பயணியை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா், மல்லாங்கிணறு சாலை தங்கமணி காலனியைச் சோ்ந்தவா் ஜெயக்கொடி (62). இவா், இலங்கை யாழ்ப்பாணத்... மேலும் பார்க்க

பிசி, எம்பிசி கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கைக்கு அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் கீழ் இயங்கும் கல்லூரி விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வர... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: ரயில் சேவைகளில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொறியியல் பணிகள் காரணமாக, செங்க... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: சிறுவன் உள்பட இருவா் கைது

திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டை குடிநீா்த் தொட்டி பகுதியில் ம... மேலும் பார்க்க