செய்திகள் :

20,000 பேருக்கு வேலைவாய்ப்பு: காக்னிசன்ட் அறிவிப்பு!

post image

அமெரிக்காவின் நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட், இந்தியாவில் புதிதாக 20,000 பணியிடங்களைச் சேர்க்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிக்குமார் கூறியதாவது, ``கடந்த இரு ஆண்டுகளில் சேவைத் திட்டங்கள் அதிகரித்ததால், வலுவான தொழிலாளர் கட்டமைப்பை உருவாக்கவுள்ளோம். பல புதிய பட்டதாரிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிதாகப் பணியமர்த்துதல், செயல் நுண்ணறிவு மூலம் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவதில்தான், நிறுவனம் கவனம் செலுத்துகிறது.

14,000 முன்னாள் ஊழியர்கள் மீண்டும் நிறுவனத்தில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில், எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக, 20,000 பணியாளர்கள் அமர்த்தப்படுகின்றனர். இது, கடந்தாண்டைவிட இரு மடங்கு அதிகமாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் மாதம்வரையில் மட்டும் 5.1 பில்லியன் டாலருடன் ஆண்டுக்கு 7.45 சதவிகித வளர்ச்சியடைந்ததாக காக்னிசன்ட் அறிவித்திருந்தது.

இதையும் படிக்க:மதுரை வந்த விஜய்.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க