2006 குண்டுவெடிப்பு! உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு!!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2006-ஆம் ஆண்டு ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரை விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை 24ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.
குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேருக்கும் எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவா்கள் அனைவரையும் விடுதலை செய்து மும்பை உயா் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரும் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் மும்பை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்யவிருக்கிறது.
இந்த மனுவை வரும் 24ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த மனுவை அவசரப் பட்டியலில் சேர்த்து விசாரிக்க வேண்டிய நிலைமை இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இதனை ஏற்றுக்கொணட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை வியாழக்கிழமைக்கு பட்டியலிட்டது.