செய்திகள் :

2024-ல் டிரம்பை ஆதரித்த வாக்காளர்களில் 64% பேர் போருக்கு எதிராக உள்ளனர்!

post image

இஸ்ரேல் - ஈரான் போரில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், 2024ஆம் ஆண்டில் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் 64 சதவீதம் பேர் போருக்கு ஆதரவு அளிப்பதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜனநாயக மையம் (டெமாக்ரஸி இன்ஸ்டிடியூட்) மற்றும் கிரே ஹவுஸ் ஆகியவை தனித்தனியாக டிரம்ப் வாக்காளர்களிடம் இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பது குறித்து கருத்துக் கணிப்புகளை நடத்தியிருக்கிறது.

ஜனநாயக அமையம் கேட்டிருக்கும் கேள்வியில், அமெரிக்கா போரில் பங்கேற்க வேண்டுமா? ஈரானுக்கு எதிராக அமெரிக்கப் படைகளை அனுப்புவது உள்ளிட்டவற்றில் ஈடுபட வேண்டுமா? என்ற கேள்விகளுக்கு வாக்காளர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.

அதன்படி, இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்ற, டிரம்புக்கு ஆதவாக 2024ல் வாக்களித்த 1,150பேரில் 64 சதவீதம் பேர், ஈரானுக்கு எதிராக அமெரிக்கப் படைகளை அனுப்புவதற்கு எதிராகவும், 26 சதவீதம் பேர் ஆதரவாகவும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். அதாவது 736 பேர் வேண்டாம் என்று பதிவிட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிமை முதல் திங்கள் வரை இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. மேற்கண்டவர்களுடன் 1,250 பணியாற்றும் வாக்காளர்களும் பங்கேற்றுள்ளனர்.

கிரே ஹவுஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், 67 சதவீதம் பேர் ஈரானுக்கு எதிரான தாக்குதலை ஆதரித்திருக்கிறார்கள். 16 சதவீதம் பேர் மறுக்கவில்லை, இந்தக் கருத்துக் கணிப்பானது 450 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், 35 சதவீதம் பேர், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நேரடியாக தாக்குதலைத் தொடங்கி, அணு ஆயுத உற்பத்தியை தடுக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். 37 சதவீதம் பேர் மறுக்கவில்லை. இந்த கருத்துக் கணிப்பில் படைகளை அனுப்புவது குறித்து கேள்வி இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் பேசியது என்ன? டிரம்ப் பேட்டி

பாகிஸ்தான் ராணுவ தளபதி உடனான சந்திப்பின்போது பேசியது என்ன என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் 5 நாள்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்காவு... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல்! தடம் புரண்ட பெட்டிகள்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து அதன் பாதையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 6 பெட்டிகள் தடம் புரண்டன. பெஷாவரிலிருந்து பலுசிஸ்தானின் குவேட்டா நோக்கி ஜாஃபர் எக்ஸ... மேலும் பார்க்க

ஈரான் ஒருபோதும் சரணடையாது: டிரம்ப்புக்கு கேமேனி பதில்

இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிராக போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ஈரான் ஒருபோதும் சரணடையாது என அந்நாட்டின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் உடனான போரில் அமெரிக்கா தலை... மேலும் பார்க்க

பி-2 பாம்பர்ஸ் விமானங்கள் புறப்பட்டன? ஈரானின் நிலவறைகளை அழிக்கத் திட்டமா?

அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான பி -2 பாம்பர்ஸ் விமானங்கள் ஈரானின் அணுசக்தி உற்பத்தி நிலவறைகளை அழிக்கப் புறப்பட்டிருக்கலாம்.ஏனெனில், இந்தியப் பெருங்கடலில் உள்ள டீகோ கார்சியா என்ற தீவில் நிறுத்திவை... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு! மக்கள் வெளியேற்றம்.. விமானங்கள் ரத்து!

இந்தோனேசியா நாட்டிலுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை வெடித்து அப்பகுதி முழுவதும் சாம்பல் படலம் மற்றும் புகைப் பரவியதால், அங்குள்ள ஏராளமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தோனே... மேலும் பார்க்க

கமேனி ஒருவேளை கொல்லப்பட்டால்... ஈரானின் புதிய தலைவர் பதவி யாருக்கு?

ஈரான் மதகுரு அயத்துல்லா அலி கமேனி ஒருவேளை கொல்லப்பட்டால் ஈரானின் புதிய தலைவராக யார் தேர்தெடுக்கப்படுவார்கள் என கருத்துகள் எழுந்திருக்கின்றன.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த வெ... மேலும் பார்க்க