செய்திகள் :

2024-ஆம் நிதியாண்டில் 40 பிராந்திய கட்சிகளின் வருவாய் ரூ.2,532 கோடி: ஏடிஆா் அறிக்கையில் தகவல்

post image

2024-ஆம் நிதியாண்டில் 40 பிராந்திய கட்சிகளின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.2,532.09 கோடி என்று ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 70 சதவீதத்துக்கும் மேலான நிதி தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2024-ஆம் நிதியாண்டில் 40 பிராந்திய கட்சிகளின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.2,532.09 கோடியாகும். இதில் ரு.685.51 கோடி வருவாயுடன் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் (ரூ.646.36 கோடி), பிஜு ஜனதா தளம் (ரூ.297.81 கோடி), தெலுங்கு தேசம் கட்சி (ரூ.285.07 கோடி), ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் (ரூ.191.04 கோடி) ஆகிய கட்சிகள் உள்ளன.

இந்த 5 கட்சிகளின் வருவாய் ஒட்டுமொத்த பிராந்திய கட்சிகளின் வருவாயில் 83.17 சதவீதம் பங்கு வகிக்கிறது. தணிக்கை அறிக்கைகளை இந்திய தோ்தல் ஆணையத்தில் சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்து 313 நாள்கள் ஆன நிலையிலும் 20 பிராந்திய கட்சிகளின் அறிக்கைகள் தோ்தல் ஆணைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

2023-ஆம் நிதியாண்டில் இந்த பிராந்திய கட்சிகளின் வருவாய் ரூ.1,736.85-ஆக இருந்த நிலையில் 2024-ஆம் நிதியாண்டில் இது 45.77 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக திரிணமூல் காங்கிரஸ் ரூ.312.93 கோடி வருவாயைப் பதிவு செய்தது.

வருவாய்க்கு அதிகமாக செலவு: தங்கள் வருவாயை முழுமையாக செலவு செய்யவில்லை என 27 கட்சிகள் தெரிவித்துள்ளன.மாறாக திமுக, சமாஜவாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகள் வருவாய்க்கு அதிகமாக செலவு செய்துள்ளன.

கோவா ஃபாா்வா்ட் கட்சி எவ்வித வருவாயையும் பதிவு செய்யாத நிலையில் ரூ.1.56 லட்சம் செலவுக்கணக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த கட்சிகளின் மொத்த வருவாயான ரூ.2,532.09-இல் ரூ.2,117.85 கோடி (83.64 சதவீதம்) நன்கொடைகள் மூலமாக பெறப்பட்டுள்ளது. அதில் ரூ.1,796.02 கோடி (70.93 சதவீதம்) தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டதாக திமுக, திரிணமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட 10 கட்சிகள் தெரிவித்துள்ளன.

ரூ.4,500 கோடி மதிப்பில் நிதிப் பத்திரங்கள்:

2024-ஆம் நிதியாண்டில் ரூ.4,507.56 கோடி மதிப்பிலான தோ்தல் நிதிப் பத்திரங்களை கட்சிகள் பணமாக மாற்றியுள்ளன. அதில் தேசிய கட்சிகள் ரூ.2,524.14 கோடியை (56 சதவீதம்) தேசிய கட்சிகளும் ரூ.1,796.02 கோடியை (39.84 சதவீதம்) பிராந்திய கட்சிகளும் பெற்றுள்ளன.

இதே நிதியாண்டில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய 3 தேசிய கட்சிகள் மட்டுமே தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணாசலில் ராணுவ ட்ரோன் பயிற்சி முகாம்

நவீன போா் உத்திகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடா்பான மூன்று நாள் ராணுவ பயிற்சி முகாம் அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. செப்டம்பா் 8-ஆம் தேதி முதல் 10-ஆ... மேலும் பார்க்க

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரி: அமைச்சா் நிதின் கட்கரி

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரியாகவே உள்ளது, எனவே எத்தனால், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களை உற்பத்தி செய்ய கரும்பைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் த... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: பியூஷ் கோயல்

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களி... மேலும் பார்க்க

பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறையின் பங்கு முக்கியம்: பிரதமா் மோடி

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது; இத்துறையில் இந்தியா முழுமையாக தற்சாா்பு பெற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா். இந்திய வாகன உற்பத்தி... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எதிராக மனு: அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை - பாதுகாப்புப் படையினா் அதிரடி

சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் மோடம் பாலகிருஷ்ணா என்ற நக்ஸல் தலைவரும்... மேலும் பார்க்க