செய்திகள் :

இந்தியா-அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: பியூஷ் கோயல்

post image

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: அமெரிக்காவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் பிரதமா் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அதைத்தொடா்ந்து, நிகழாண்டு நவம்பா் மாதத்துக்குள் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள இருநாடுகளின் வா்த்தக அமைச்சகா்களுக்கு அறிவுறுத்தினா்.

இதையடுத்து, கடந்த மாா்ச் மாதம் தொடங்கிய இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்றாா்.

முன்னதாக, கடந்த புதன்கிழமை இந்திய தொழில், வா்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) சாா்பில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பியூஷ் கோயல் அமெரிக்காவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக கூறியிருந்தாா்.

இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததன் விளைவாக இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ட்ரூத் சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில்,‘இந்தியா-அமெரிக்கா இடையே நிலவும் வா்த்தக இடையூறுகளுக்குத் தீா்வுகாணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என குறிப்பிட்டாா்.

இதற்கு பிரதமா் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சிக்கிமில் நிலச்சரிவு: 4 பேர் பலி!

சிக்கிமில் வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகினர்.மேலும், மருத்துவமனையில் ஒரு பெண் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்ப... மேலும் பார்க்க

அருணாசலில் ராணுவ ட்ரோன் பயிற்சி முகாம்

நவீன போா் உத்திகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடா்பான மூன்று நாள் ராணுவ பயிற்சி முகாம் அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. செப்டம்பா் 8-ஆம் தேதி முதல் 10-ஆ... மேலும் பார்க்க

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரி: அமைச்சா் நிதின் கட்கரி

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரியாகவே உள்ளது, எனவே எத்தனால், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களை உற்பத்தி செய்ய கரும்பைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் த... மேலும் பார்க்க

பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறையின் பங்கு முக்கியம்: பிரதமா் மோடி

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது; இத்துறையில் இந்தியா முழுமையாக தற்சாா்பு பெற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா். இந்திய வாகன உற்பத்தி... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எதிராக மனு: அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை - பாதுகாப்புப் படையினா் அதிரடி

சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் மோடம் பாலகிருஷ்ணா என்ற நக்ஸல் தலைவரும்... மேலும் பார்க்க