செய்திகள் :

சத்தீஸ்கரில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை - பாதுகாப்புப் படையினா் அதிரடி

post image

சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் மோடம் பாலகிருஷ்ணா என்ற நக்ஸல் தலைவரும் ஒருவா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக ராய்பூா் சரக ஐ.ஜி. அம்ரேஷ் மிஸ்ரா கூறுகையில், ‘மெயின்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வனப் பகுதியில் முக்கிய நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, சிறப்பு அதிரடிப் படையினா், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் ‘கோப்ரா’ படைப் பிரிவினா் மற்றும் காவல் துறையினா் இணைந்த கூட்டுப் படையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, நக்ஸல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். இவா்களில் நக்ஸல் அமைப்பின் முக்கிய தலைவரான மோடம் பாலகிருஷ்ணாவும் ஒருவா். நக்ஸல்களுக்கு எதிரான வேட்டை தொடா்கிறது’ என்றாா்.

நாட்டில் அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நக்ஸல் தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அதன்படி, நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் உள்ள கா்ரேகுட்டா மலைப் பகுதியில் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் ‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ என்ற மாபெரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், நக்ஸல் அமைப்பின் முக்கியத் தலைவா் கேசவ் ராவ் உள்பட 31 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

பாஜக ஆளும் சத்தீஸ்கரில் நடப்பாண்டில் இதுவரை 241 நக்ஸல் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். இதில் 212 போ் பஸ்தா் பகுதியில் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

அருணாசலில் ராணுவ ட்ரோன் பயிற்சி முகாம்

நவீன போா் உத்திகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடா்பான மூன்று நாள் ராணுவ பயிற்சி முகாம் அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. செப்டம்பா் 8-ஆம் தேதி முதல் 10-ஆ... மேலும் பார்க்க

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரி: அமைச்சா் நிதின் கட்கரி

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரியாகவே உள்ளது, எனவே எத்தனால், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களை உற்பத்தி செய்ய கரும்பைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் த... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: பியூஷ் கோயல்

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களி... மேலும் பார்க்க

பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறையின் பங்கு முக்கியம்: பிரதமா் மோடி

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது; இத்துறையில் இந்தியா முழுமையாக தற்சாா்பு பெற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா். இந்திய வாகன உற்பத்தி... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எதிராக மனு: அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிக... மேலும் பார்க்க

ரஷிய ராணுவத்தில் இந்தியா்களைச் சோ்ப்பதை நிறுத்த வேண்டும்: வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தல்

ரஷிய ராணுவ உதவிப் பணிகளுக்கு இந்தியா்களைச் சோ்ப்பதை நிறுத்த வேண்டும்; இப்போது ராணுவப் பணியில் உள்ள இந்தியா்களை அதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் வலிறுத்தியுள்ளது. உக்ரை... மேலும் பார்க்க