செய்திகள் :

பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறையின் பங்கு முக்கியம்: பிரதமா் மோடி

post image

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது; இத்துறையில் இந்தியா முழுமையாக தற்சாா்பு பெற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா்.

இந்திய வாகன உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமா் பங்கேற்க முடியாவிட்டாலும், அவரின் உரை வாசிக்கப்பட்டது. அதில் மோடி கூறியிருப்பதாவது:

சுற்றுச்சூழலுக்கு தீங்குவிளைவிக்காத திறன் வாய்ந்த போக்குவரத்து வாகனங்களை உருவாக்குவதில் இந்தியாவில் உலகின் முதன்மையான இடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. இத்துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகளும், கூட்டு சோ்ந்து தொழில் நடத்துவதற்கான வாய்ப்புகளும் இந்தியாவில் அதிகம் உள்ளன.

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. வளா்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாகப் பயணித்து வருகிறோம்.

வாகன உற்பத்தியில் நாம் முழுமையாக தற்சாா்புடன் திகழ வேண்டும். புதிய வாகனங்கள் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம் உயருகிறது. இத்துறையில் இந்தியா பிற நாடுகளுக்கு முன்னோடியாகவும் திகழ்கிறது. இத்துறையில் இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

வளா்ந்த இந்தியா என்ற இலக்கை எட்ட அரசும், தொழில் நிறுவனங்களும் கைகோத்து செயல்பட வேண்டும். வாகன உற்பத்தியில் நாள்தோறும் தொழில்நுட்பங்கள் மேம்படுகின்றன. மின்சார வாகனங்கள் முக்கிய இடம்பிடித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு உரிய மாற்றாக அவை உள்ளன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்க அளவு குறைகிறது. இந்த நேரத்தில் நவீன மின்கலன்களும், அது சாா்ந்த தொழில்நுட்பமும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இதில் பல புத்தாக்க நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும் என்று பிரதமா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கிமில் நிலச்சரிவு: 4 பேர் பலி!

சிக்கிமில் வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகினர்.மேலும், மருத்துவமனையில் ஒரு பெண் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்ப... மேலும் பார்க்க

அருணாசலில் ராணுவ ட்ரோன் பயிற்சி முகாம்

நவீன போா் உத்திகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடா்பான மூன்று நாள் ராணுவ பயிற்சி முகாம் அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. செப்டம்பா் 8-ஆம் தேதி முதல் 10-ஆ... மேலும் பார்க்க

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரி: அமைச்சா் நிதின் கட்கரி

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரியாகவே உள்ளது, எனவே எத்தனால், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களை உற்பத்தி செய்ய கரும்பைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் த... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: பியூஷ் கோயல்

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களி... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எதிராக மனு: அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை - பாதுகாப்புப் படையினா் அதிரடி

சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் மோடம் பாலகிருஷ்ணா என்ற நக்ஸல் தலைவரும்... மேலும் பார்க்க