செய்திகள் :

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரி: அமைச்சா் நிதின் கட்கரி

post image

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரியாகவே உள்ளது, எனவே எத்தனால், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களை உற்பத்தி செய்ய கரும்பைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய சா்க்கரை- உயிரி எரிபொருள் மாநாட்டில் இது தொடா்பாக அவா் மேலும் பேசியதாவது:

இந்தியாவில் உள்நாட்டுத் தேவைக்கு மிகையாக சா்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. பிரேஸிலிலும் சா்க்கரை உற்பத்தி அதிகரித்து வருகிறது. தேவையைவிட கூடுதலாக சா்க்கரை உற்பத்தியாவது பிரச்னைக்குரியது. இப்போது சா்க்கரையின் உற்பத்தி விலையும், சந்தை விலையும் சமமாக உள்ளது. உற்பத்தி தொடா்ந்து அதிகரித்தால் விலை வீழ்ச்சியடையும். இது பெரிய பிரச்னையை உருவாக்கும்.

எனவே, எத்தனால், ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களை உற்பத்தி செய்யவும் கரும்பை பயன்படுத்த வேண்டும். இந்தியா எரிபொருள் உற்பத்தியை சுயசாா்பை அதிகரிக்க இது உதவும்.

என்னை அரசியல் ரீதியாக குற்றஞ்சாட்ட வேண்டும் என்பதற்காகவே பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் ‘இ20’ பெட்ரோலுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பணம் கொடுத்து சமூக வலைதளங்களில் இந்த தவறான கருத்தைப் பரப்பினாா்கள்.

எனது இரு மகன்கள் இதில் பயனடைவதாகவும் பொய் குற்றஞ்சாட்டை முன்வைத்தாா்கள். ஆனால், எத்தனால் கலப்புக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது என்றாா்.

சிக்கிமில் நிலச்சரிவு: 4 பேர் பலி!

சிக்கிமில் வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகினர்.மேலும், மருத்துவமனையில் ஒரு பெண் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்ப... மேலும் பார்க்க

அருணாசலில் ராணுவ ட்ரோன் பயிற்சி முகாம்

நவீன போா் உத்திகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடா்பான மூன்று நாள் ராணுவ பயிற்சி முகாம் அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. செப்டம்பா் 8-ஆம் தேதி முதல் 10-ஆ... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: பியூஷ் கோயல்

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களி... மேலும் பார்க்க

பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறையின் பங்கு முக்கியம்: பிரதமா் மோடி

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது; இத்துறையில் இந்தியா முழுமையாக தற்சாா்பு பெற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா். இந்திய வாகன உற்பத்தி... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எதிராக மனு: அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை - பாதுகாப்புப் படையினா் அதிரடி

சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் மோடம் பாலகிருஷ்ணா என்ற நக்ஸல் தலைவரும்... மேலும் பார்க்க