செய்திகள் :

2025-ல் இதுவரை ரூ. 1 லட்சம் கோடி வெளிநாட்டு நிதி வெளியேற்றம்!

post image

2025-ஆம் ஆண்டில் இதுவரை இந்திய பங்குச் சந்தையில் இருந்து ரூ. 1 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. பிப்ரவரில் கடந்த இரு வாரங்களில் மட்டும் ரூ. 21,272 கோடி வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து வரி விதிப்பில் செய்த மாற்றங்கள் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட நிலையற்றத்தன்மை உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகள் குறைந்து வருகின்றன.

கடந்த ஜனவரி மாதத்தில் ரூ. 78,027 கோடி வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளன. பிப்ரவரியில் இரண்டு வாரங்களில் 21,272 கோடி நிதி வெளியேறியுள்ளது. இவை இரண்டையும் சேர்த்து ரூ. 99,299 கோடி வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளது.

ஜியோஜித் என்ற நிதிச் சேவை நிறுவனத்தின் மூத்த முதலீட்டு வல்லுநர் வி.கே. விஜயகுமார், டாலர் மதிப்பு குறையும்போது வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவது தலைகீழாக நடக்கும் என்றும் அதுவரை இந்த நிலை தொடரும் எனவும் குறிப்பிட்டார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சர்வதேச அரசியலானது, இந்தியா போன்ற ஏற்ற இறக்கங்கள் அடிக்கடி நிகழும் சந்தையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால், இந்திய பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய கட்டண அச்சுறுத்தல்களால் பார்மா பங்குகள் சரிவுடன் முடிவு!

புதுதில்லி: அமெரிக்காவின் புதிய கட்டண அச்சுறுத்தல்களால் பல பார்மா பங்குகள் இன்று சரிவுடன் முடிவடைந்தது. டாக்டர் ரெட்டிஸ் பங்குகள் 2.63 சதவிகிதமும், ஜைடஸ் லைஃப் சயின்சஸ் 2.47 சதவிகிதமும், அரபிந்தோ பார்... மேலும் பார்க்க

ஒன்பது அதானி குழும பங்குகள் சரிவுடன் முடிவு!

புதுதில்லி: லஞ்சம் வழங்கியது குறித்து கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி மீதான புகார் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் பெடரல் நீதிபதியிடம் தெரிவி... மேலும் பார்க்க

5 சதவிகிதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் பட்டியலிடப்பட்ட ஹெக்சாவேர் டெக் பங்குகள்!

புதுதில்லி: ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் அதன் வெளியீட்டு விலையான ரூ.708 க்கு நிகராக 5 சதவிகிதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் இன்று பட்டியலிடப்பட்டது.இந்த பங்கின் விலையானது ப... மேலும் பார்க்க

மிட், ஸ்மால்கேப் பேரணியுடன் நிலையற்ற அமர்வில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிந்தது. அமெரிக்க அதிபரான டிரம்ப் வாகனம், குறைக்கடத்தி மற்றும் மருந்து இறக்குமதிகள் மீது 25 சதவிகித வரிகளை விதிக்கும் திட்டங்களை அற... மேலும் பார்க்க

குறைந்த விலையில் ஜியோ எலக்ட்ரிக் சைக்கிள்!

தொலைத் தொடர்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோலோச்சி வந்த ஜியோ நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்கள் துறையில் அடியெடுத்து வைக்கிறது. எலக்ட்ரிக் வாகனங்கள் துறையில், குறைந்த விலையில், சுற்றுச்சூழலுக்கு உகந... மேலும் பார்க்க

தென்னகத்தில் 2 கோடியைக் கடந்த ஹோண்டா விற்பனை

இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹோண்டா மோட்டாா் சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியாவின் விற்பனை, நாட்டின் தெற்குப் பகுதிகளில் இரண்டு கோடியைத் தாண்டியுள்ளது. இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டு... மேலும் பார்க்க