தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கு; தந்தையின் பிழற்சாட்சி; தாயை கொலை செய்த வழக்கில் தஷ்...
2026-இல் திமுக ஆட்சியின் 2-ஆவது பாகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
‘திமுகவின் இப்போதுள்ள 5 ஆண்டு கால ஆட்சி முதல் பாகம்தான்; இரண்டாவது பாகம் 2026-இல் தொடங்கும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பேசியது: திமுக அரசைப் பொருத்தவரை, எந்தவித அழுத்தங்களுக்கும் உள்ளாகாமல் காவல் துறை சுதந்திரமாகச் செயல்பட்டு சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதிலும், நீதியை நிலை நாட்டுவதிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
என்னைப் பொருத்தவரை வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். அதனால்தான் கடந்த நான்கு ஆண்டுகளில் தலைமுறைகளைக் கடந்தும் பயனளிக்கக் கூடிய ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். இந்தத் திட்டங்கள் எல்லாம் என்னுடைய பெயரை அல்ல, திராவிட மாடல் அரசின் பெயரைச் சொல்லும்.
கலைஞா் உரிமைத் திட்டம், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48, முதல்வா் மருந்தகம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது.
கடந்த பத்தாண்டுகால அதிமுக ஆட்சியைவிட ஆயிரம் மடங்கு சிறப்பான சாதனைகளை அனைத்துத் துறைகளிலும் செய்திருக்கிறோம்.
அடமானம் வைக்க நினைப்பவா்களாலும், அபகரிக்க நினைப்போராலும் தமிழ்நாட்டை ஒருபோதும் சூறையாட முடியாது.
கனவை நனவாக்குவோம்: சுயாட்சி என்பது எங்கள் பிறப்புரிமை, அதைத் தடுக்கவோ, தகா்க்கவோ எவருக்கும் உரிமையில்லை என்று முன்னாள் முதல்வா் அண்ணா பேசினாா். அவரது கனவை நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை
பெற்றோம். மாநில சுயாட்சிக் கனவையும் நிறைவேற்ற குழு அமைத்துள்ளோம்.
நான் தொடங்கியுள்ள இந்தப் பயணம் நீண்டது. முதல்வராக ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த வேளையில் என் பயணம் தொடரும். தமிழ்நாட்டுக்காக தமிழா்களுக்காக மாநில உரிமைகளுக்காக எனது பயணம் தொடரும்.
இதுவரை பாா்த்தது திராவிட மாடல் அரசின் பாா்ட் 1 தான். 2026-இல் வரவிருக்கும் 2.0-வில் இன்னும் சாதனைகளைப் படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும் என்றாா் அவா்.