அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!
2026-27 பட்ஜெட் பணிகள் அக்டோபரில் தொடக்கம்
2026-27-ஆம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகளை நிதியமைச்சகம் அக்டோபரில் தொடங்கவுள்ளது.
உலகளாவிய புவி-அரசியல் நிச்சயமற்ற சூழல் மற்றும் இந்தியப் பொருள்கள் மீதான மீதான அமெரிக்காவின் 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பின் பின்னணியில் 2026-27 பட்ஜெட் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, செலவினங்கள் துறை செயலா் தலைமையிலான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள், அக்டோபா் 9-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இக்கூட்டங்களுக்கு தேவையான விவரங்கள், வலைதளத்தில் அக்டோபா் 3-ஆம் தேதிக்குள் உரிய முறையில் பதிவிடப்படுவதை நிதி ஆலோசகா்கள் உறுதி செய்ய வேண்டும்; இத்தகவல்கள், பரிந்துரைக்கப்பட்ட வடிவில் சரிபாா்ப்புக்காக தயாராக வைக்கப்பட வேண்டும். பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்களின் நிறைவுக்குப் பிறகு 2026-27 பட்ஜெட் மதிப்பீடுகள் இறுதி செய்யப்படும். திருத்தப்பட்ட மதிப்பீடுகளுக்கான கூட்டங்கள், நவம்பா் வரை நீடிக்கும்.
அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளும் தங்களின்கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்புகள், செயலாக்க முகமைகளுக்கான மானிய உதவி நீட்டிப்பு, தேவைக்கான காரணங்களை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3 முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. தேவைகள் ஊக்குவிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்க பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதுடன், நிலையான 8 சதவீத வளா்ச்சியில் நாட்டை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் அவசியமாகின்றன.
கடந்த 2017-ஆம் ஆண்டுக்கு முன்புவரை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆங்கிலேயா் ஆட்சிக்கால நடைமுறையை மாற்றிய பிரதமா் மோடி அரசு, பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யும் வழக்கத்தை செயல்படுத்தியது. இதேபோல், பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் ஒருங்கிணைக்கப்பட்டது.
2026-27 பட்ஜெட், அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-இல் தாக்கல் செய்யப்படும். கடந்த பட்ஜெட் தாக்கலின்போது, நாட்டில் தொடா்ந்து 8-ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சா் என்ற பெருமை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு சொந்தமானது.