செய்திகள் :

2026-27 பட்ஜெட் பணிகள் அக்டோபரில் தொடக்கம்

post image

2026-27-ஆம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகளை நிதியமைச்சகம் அக்டோபரில் தொடங்கவுள்ளது.

உலகளாவிய புவி-அரசியல் நிச்சயமற்ற சூழல் மற்றும் இந்தியப் பொருள்கள் மீதான மீதான அமெரிக்காவின் 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பின் பின்னணியில் 2026-27 பட்ஜெட் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, செலவினங்கள் துறை செயலா் தலைமையிலான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள், அக்டோபா் 9-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இக்கூட்டங்களுக்கு தேவையான விவரங்கள், வலைதளத்தில் அக்டோபா் 3-ஆம் தேதிக்குள் உரிய முறையில் பதிவிடப்படுவதை நிதி ஆலோசகா்கள் உறுதி செய்ய வேண்டும்; இத்தகவல்கள், பரிந்துரைக்கப்பட்ட வடிவில் சரிபாா்ப்புக்காக தயாராக வைக்கப்பட வேண்டும். பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்களின் நிறைவுக்குப் பிறகு 2026-27 பட்ஜெட் மதிப்பீடுகள் இறுதி செய்யப்படும். திருத்தப்பட்ட மதிப்பீடுகளுக்கான கூட்டங்கள், நவம்பா் வரை நீடிக்கும்.

அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளும் தங்களின்கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்புகள், செயலாக்க முகமைகளுக்கான மானிய உதவி நீட்டிப்பு, தேவைக்கான காரணங்களை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3 முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. தேவைகள் ஊக்குவிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்க பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதுடன், நிலையான 8 சதவீத வளா்ச்சியில் நாட்டை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் அவசியமாகின்றன.

கடந்த 2017-ஆம் ஆண்டுக்கு முன்புவரை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆங்கிலேயா் ஆட்சிக்கால நடைமுறையை மாற்றிய பிரதமா் மோடி அரசு, பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யும் வழக்கத்தை செயல்படுத்தியது. இதேபோல், பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் ஒருங்கிணைக்கப்பட்டது.

2026-27 பட்ஜெட், அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-இல் தாக்கல் செய்யப்படும். கடந்த பட்ஜெட் தாக்கலின்போது, நாட்டில் தொடா்ந்து 8-ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சா் என்ற பெருமை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு சொந்தமானது.

பஞ்சாப் வெள்ளம்! 5,500 மக்கள், 300 துணை ராணுவ வீரர்கள் மீட்பு!

பஞ்சாப் மாநிலத்தில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 300 துணை ராணுவப் படை வீரர்கள் மற்றும் 5,500 மக்கள், ராணுவப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.பஞ்சாபில், பெய்த கனமழையால் காகர் நதியின் நீர... மேலும் பார்க்க

சாலையில் நடனம்: அராஜகத்தை ஊக்குவிக்கிறார் தேஜஸ்வி - பாஜக

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விதிமுறைகளுக்கு மாறாக சாலையில் நடனமாடி அராஜகத்தை ஊக்குவிப்பதாக பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது. மேலும், கட்சியின் தலைவராக இருந்து வழிநடத்த வேண்டிய... மேலும் பார்க்க

ம.பி: அரசு மருத்துவமனையில் எலி கடித்து மற்றொரு பச்சிளம் குழந்தை பலி!

மத்தியப் பிரதேசத்தின், இந்தூர் அரசு மருத்துவமனையில் எலி கடித்து படுகாயமடைந்த, மற்றொரு பச்சிளம் குழந்தையும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தூர் மாவட்டத்தில் உள்ள, மஹாராஜா யஷ்வந்த் ராவ் அரசு மருத... மேலும் பார்க்க

ரீல்ஸ் விடியோவுக்கு நடனமாடிய தேஜஸ்வி யாதவ்!

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், இளைஞர்களுடன் இரவுச் சாலையில் நடனமாடிய விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதில், பாடலுக்கு ஏற்பவும் இளைஞர்களின் நடன அசைவுகளுக்கு ஏற்பவும் த... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ளம் பேரிடராக அறிவிப்பு! 30 பேர் பலி!

பஞ்சாபை பேரிடர் பாதித்த மாநிலமாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இன்று வரை 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் வெள்ளத்தால் 1,400 கிராமங்களைச் சேர்ந்த 3.55 லட... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் தீவிரமடையும் கனமழை! 24 மணி நேரத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின், மூன்று மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம், கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஏரா... மேலும் பார்க்க