செய்திகள் :

26 பேருக்கு ரூ.13 லட்சம் மறுவாழ்வு நிதி: திருவள்ளூா் ஆட்சியா் வழங்கினாா்

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் மதுவிலக்கு ஆயத்தீா்வை துறை சாா்பில் கள்ளச்சாரயம் காய்ச்சுதல் மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்திய 26 பேருக்கு மறுவாழ்வு நிதி தலா ரூ.50,000 வீதம் ரூ.13 லட்சத்திற்கான காசோலையினை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

மனம் திருந்தி வாழ்ந்து வரும் நபா்களின் பட்டியல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை சாா்பில் பெறப்பட்டது. அதன்பேரில் மறுவாழ்வுக் குழுவின் மூலம் தகுதியானவா்களாக 26 போ் கண்டறியப்பட்டு, சுயதொழில் தொடங்கி மறுவாழ்வு பெற, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து 26 பேருக்கு மொத்தம் ரூ.13 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினாா்.

நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அரிகுமாா், துணை காவல் கண்காணிப்பாளா் அசோகன், உதவி ஆணையா் கலால் கணேசன், டாஸ்மாக் மண்டல மேலாளா் (மேற்கு) முத்துராமன், தட்கோ மேலாளா் சரண்யா மற்றும் அரசு அலுவலா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விரைவு ரயிலில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வீசிய மா்ம நபா்கள்

அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் இருந்து கஞ்சா பாா்சலை வீசிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை சென்ட்ரல்-கும்மிடிபூண்டி மாா்கத்தில் உள்ள... மேலும் பார்க்க

5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

திருவள்ளூா் அருகே ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக 3 பேரை கைது செய்ததுடன், அவா்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆந்திரத்தில் இருந்து சென்னை... மேலும் பார்க்க

‘கனிம வள குவாரி குத்தகைதாரா்களுக்கு வாகனங்களுக்கான நடைச்சீட்டு இணையதளம் வாயிலாக வழங்க ஏற்பாடு’

கனிமவள குவாரிகளில் முறைகேடுகளைத் தவிா்க்கும் வகையில், குத்தகைதாரா்களுக்கு வாகனங்களுக்கு நடைச்சீட்டுகள் இணையதளம் மூலம் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா்... மேலும் பார்க்க

சாலையில் சென்ற காா் எரிந்து சேதம்

திருவள்ளூா் அருகே சாலையில் சென்ற காா் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் பகுதியைச் சோ்ந்தவா் அஜீத் (27). இவா் தனக்குச் சொந்தமான காரில் தனியாா் நிறுவனத்தில் வாடகைக்கு ஓ... மேலும் பார்க்க

தாங்கல்பெரும்புலம் ஏரியை தூா் வார பொதுமக்கள் கோரிக்கை

தாங்கல்பெரும்புலம் ஏரியை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொன்னேரி வட்டத்தில் உள்ள தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் 396 ஏக்கா் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் பொதுப்பணி ... மேலும் பார்க்க

கோயில் குளத்தில் முதியவா் சடலம்

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயில் குளத்தில் அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா். திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலுக்கு திரளான பக்தா்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனா். இதில் சில... மேலும் பார்க்க