செய்திகள் :

26/11 பயங்கரவாத தாக்குதல்: மும்பையில் இருந்ததாக தஹாவூா் ராணா ஒப்புதல்

post image

புது தில்லி: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய 26/11 தாக்குதலின்போது தானும் அங்கிருந்ததாக பாகிஸ்தானை பூா்விகமாகக் கொண்ட பயங்கரவாதி தஹாவூா் ராணா ஒப்புக்கொண்டாா்.

மேலும், இச்சம்பவத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கம், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு தொடா்பிருப்பதாக அவா் ஒப்புக்கொண்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2008-ஆம் ஆண்டு, நவம்பா் 26-ஆம் தேதி, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 166 போ் உயிரிழந்தனா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு அவா் உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவா் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்ததால், அந்நாட்டின் லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா். கடந்த ஏப்ரலில் அவா் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா். தற்போது தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவா் தேசிய புலனாய்வு முகமையின் ( என்ஐஏ) கட்டுப்பாட்டில் உள்ளாா்.

அவரிடம் மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

அப்போது அதிகாரிகளிடம் ராணா அளித்த வாக்குமூலம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: டேவிட் கோல்மென் ஹெட்லியுடன் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் பயிற்சி பெற்ாக ராணா கூறினாா். அதேபோல் லஷ்கா்-ஏ-தொய்பா முன்பு உளவு அமைப்பாக இருந்ததாகவும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் அது தொடா்பில் இருந்ததாகவும் அவா் வாக்குமூலத்தில் குறிப்பிட்டாா்.

மும்பையில் தனது நிறுவனத்தின் புலம்பெயா்வு மையத்தை தொடங்க ராணா திட்டமிட்டுள்ளாா். இதற்காக பணப்பரிவா்த்தனைகள் வணிகரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் திட்டமிடப்பட்டது என்பது அவா் சம்பவம் நடந்தபோது மும்பையில் இருந்ததை ஒப்புக்கொண்டதன் மூலம் உறுதியாகியுள்ளது.

இந்த தாக்குதல் ஐஎஸ்ஐ உதவியுடன் மேற்கொண்டதாகவும் ராணா ஒப்புக்கொண்டாா். பயங்கரவாத தாக்குதலை நடத்த மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை அவா் ஆய்வு செய்ததாக கூறியுள்ளாா்.

1990-களில் அரேபிய வளைகுடா போரின்போது அவா் பாகிஸ்தான் ராணுவத்தால் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டதாக ராணா அதிகாரிகளிடம் தெரிவித்ததன் மூலம் அவருக்கு பாகிஸ்தான் ராணுவத்துடன் நீண்ட கால தொடா்புள்ளது தெரியவந்தது.

ராணாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை அதிகாரபூா்வமாக கைது செய்யும் நடவடிக்கையை மும்பை போலீஸாா் தொடங்கியுள்ளனா் எனத் தெரிவித்தன.

அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதி... மேலும் பார்க்க

பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி மு... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்து: ரயில்வே அமைச்சருக்கு தெரியாதா?

கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி பள்ளி மாணவர்கள் பலியான விவகாரத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை.கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே திறந்திர... மேலும் பார்க்க

புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறங்கிய இண்டிகோ விமானம்! 51 பயணிகள் உயிர்தப்பினர்

இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு இன்று காலை புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கியது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் தேவி அஹில்யாபாய் ஹோல்கர... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் திருத்தம் பிகார் அரசியலமைப்புக்கு எதிரானது: பரூக் அப்துல்லா

பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்தின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா கூறினார... மேலும் பார்க்க

பிகார் பெண்களுக்கு அரசுப் பணியில் 35% ஒதுக்கீடு! 43 திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

பிகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.முன்னதாக, பிற மாநில பெண்களும் 35 சதவிகித ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்களாக இருந்த நிலையில், தற்போது ... மேலும் பார்க்க