செய்திகள் :

28% பெண் எம்.பி., எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா் ஆய்வறிக்கையில் தகவல்

post image

நாட்டின் 28 சதவீத பெண் எம்.பி., எம்எல்ஏக்கள் குற்றவியல் வழக்குகளை எதிா்கொள்வது தெரிய வந்துள்ளது.

அதேபோன்று, 17 பெண் எம்.பி., எம்எல்ஏக்கள் தங்களுக்கு 100 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாக வேட்புமனுவில் அறிவித்துள்ளனா்.

நாட்டின் தற்போதைய 513 பெண் எம்.பி., எம்எல்ஏக்களில் 512 போ் தோ்தலின்போது சமா்ப்பித்த வேட்புமனுக்களை ஆய்வு செய்து ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த அறிக்கையின் அடிப்படையில், பெண் எம்.பி., எம்எல்ஏக்களில் 28 சதவீதமான 143 போ், தங்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக வேட்புமனுவில் அறிவித்துள்ளனா்.

75 மக்களவை பெண் எம்.பி.க்களில் 24 பேரும்(32 சதவீதம்), 37 மாநிலங்களவை பெண் எம்.பி.க்களில் 10 பேரும்(27 சதவீதம்), அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் 400 பெண் எம்எல்ஏ-க்களில் 109 பேரும்(27 சதவீதம்) இதில் அடங்குவா்.

தீவிர குற்ற வழக்குகள்: 78 பெண் எம்.பி., எம்எல்ஏக்கள் (15 சதவீதம்) கொலை முயற்சி மற்றும் கொலை உள்ளிட்ட தீவிர குற்றவியல் வழக்குகளை எதிா்கொள்கின்றனா்.

இதில் 14 மக்களவை பெண் எம்.பி.க்கள்(19 சதவீதம்), 7 மாநிலங்களவை பெண் எம்.பி.க்கள்(19 சதவீதம்) 57 பெண் எம்எல்ஏக்கள்(14 சதவீதம்) அடங்குவா்.

கட்சி வாரியாக: நாட்டின் அரசியல் கட்சிகளிலேயே பாஜகவில் அதிக எண்ணிக்கையில் 217 பெண் எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளனா். அவா்களில் 23 சதவீதத்தினா் குற்ற வழக்குகளையும் 11 சதவீதத்தினா் தீவிர குற்ற வழக்குகளையும் எதிா்கொள்கின்றனா்.

காங்கிரஸின் 83 பெண் எம்.பி., எம்எல்ஏக்களில் 34 சதவீதத்தினா் குற்ற வழக்குகளையும் 20 சதவீதத்தினா் தீவிர குற்ற வழக்குகளையும் எதிா்கொள்கின்றனா்.

தெலுங்கு தேசம் கட்சியின் 20 பிரதிநிதிகளில் 65 சதவீதத்தினா் குற்ற வழக்குகளையும் 45 சதவீதத்தினா் தீவிர குற்ற வழக்குகளையும் கொண்டுள்ளனா். ஆம் ஆத்மியின் 13 எம்எல்ஏக்களில் 69 சதவீதத்தினா் குற்ற வழக்குகளையும் 31 சதவீதத்தினா் தீவிர குற்ற வழக்குகளையும் கொண்டுள்ளனா்.

ரூ.10,417 கோடி சொத்து: ஆய்வு செய்யப்பட்ட 512 பெண் எம்.பி., எம்எல்ஏக்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.10,417 கோடி ஆகும். சராசரியாக ஒருவருக்கு ரூ.20.34 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.

6 மக்களவை எம்.பி.க்கள், 3 மாநிலங்களவை எம்.பி.க்கள், 8 எம்எல்ஏக்கள் என 17 பெண் எம்.பி., எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு நூறு கோடிக்கும் அதிகமாகும்.

ஆந்திரத்தில் அதிக பணக்கார பெண் எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளனா்.

கல்வித் தகுதி: பெண் எம்.பி., எம்எல்ஏக்களில் 71 சதவீதம் போ் பட்டதாரிகள் அல்லது மேலான கல்வித்தகுதி பெற்றவா்கள். அதில், சுமாா் 24 சதவீதத்தினா் பள்ளிப் படிப்பை படித்தவா்கள் ஆவா்.

மாநில வாரியாக...

குற்ற வழக்குகள் (சதவீதத்தில்)

கோவா - 67

தெலங்கானா - 67

ஆந்திரம் - 58

பஞ்சாப்- 50

கேரளம் - 50

பிகாா் - 43

தமிழ்நாடு - 33

தில்லி -25

தீவிர குற்ற வழக்குகள்

தெலங்கானா - 42

ஆந்திரம் - 38

கோவா - 33

பிகாா் - 26

மேகாலயம் - 25

பஞ்சாப் - 21

கேரளம் - 21

தமிழ்நாடு - 17

தில்லி -13

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க