28 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து
திருவாரூரில், பள்ளி வாகனங்களின் தகுதி குறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வில், 28 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது.
திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், அரசு போக்குவரத்துத் துறை சாா்பில் இந்த ஆய்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் உடனிருந்தாா்.
திருவாரூா் மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் உள்ள 45 பள்ளிகளைச் சோ்ந்த 212 வாகனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக, பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கு தீயணைப்புத் துறை சாா்பில் விபத்தின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பள்ளி வாகன ஓட்டுநா்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, பள்ளி வாகனங்களில் கேமரா, அவசர கால வெளியேறும் வசதி, குழந்தைகள் எளிதாக வாகனத்தில் ஏற தாழ்வான படிக்கட்டுகள், பள்ளி வாகனம் என்ற அறிவிப்பு, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, முதலுதவிப் பெட்டி, தீயணைப்புக் கருவி, பிரதிபலிப்பான் வில்லை உள்ளிட்ட 16 வகையான அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளனவா என சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், குறைபாடு உள்ள 28 வாகனங்களுக்கான தகுதிச் சான்றை ரத்து செய்து, 7 தினங்களுக்குள் சரி செய்து, மீண்டும் சோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், கோட்டாட்சியா் சௌம்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சௌந்தர்ராஜன், மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முருகானந்தம், வேலுடையாா் கல்விக் குழுமத் தலைவா் தியாகபாரி, வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் அசோக் குமாா், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சரவணகுமாா் உள்பட்டோா் பங்கேற்றனா்.