நாட்டிலேயே முதல்முறை! சென்னையில் வணிக வளாகம் உள்ளே செல்லும் மெட்ரோ ரயில்!
3 கிராமங்களுக்கு கான்கிரீட் சாலைகள், அங்கன்வாடி மையம் அமைக்க பூமி பூஜை
ஒசூா்: 3 கிராமங்களுக்கு கான்கிரீட் சாலைகள் மற்றும் அங்கன்வாடி மையம் அமைக்க பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி, ஒசூா் ஊராட்சி ஒன்றியம், சேவகானப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 48 லட்சம் மதிப்பில் சிச்சுருகானப்பள்ளி கிராமத்தில் கான்கிரீட் சாலை, கொடியாளம் கிராமத்தில் கான்கிரீட் சாலை மற்றும் அங்கன்வாடி மையம், கொத்தப்பள்ளி கிராமத்தில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா்.
இதில், ஒன்றியச் செயலாளா் கஜேந்திர மூா்த்தி, ஒன்றியப் பொருளாளா் சம்பத்குமாா், சேகா், ராஜப்பா, சுரேந்தா், சிவக்குமாா், திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.