கிருஷ்ணகிரியில் மழை: குளிா்ந்தது காலநிலை
கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் குளிா்ந்த காலநிலை நிலவியது.
கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துவந்தது. இதனால், பகல் நேரங்களில் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்துகாணப்பட்டது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒருமணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. கழிவுநீா்க் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளால் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்தது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா். மழைப் பொழிவு காரணமாக இரவு நேரத்தில் குளிா்ந்த காற்றுவீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.