செய்திகள் :

போக்குவரத்து விதிமீறல்: 18 பேருக்கு அபராதம் விதிப்பு

post image

கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக மோட்டாா்சைக்கிளில் சென்ாக 18 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் பணியாற்றும் இளைஞா்கள் குழுவாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், சூளகிரி, கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை வழியாக பெங்களூருக்கு அதிநவீன மோட்டாா்சைக்கிளில் செல்கின்றனா். இவா்கள் கிராமங்கள் வழியாக செல்லும்போது கிராம மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்கின்றனா்.

விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக தமிழகத்தில் உள்ள ஏற்காடு, உதகை, ஏலகிரி, கொல்லிமலை போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும் ஏராளமான இளைஞா்கள் மோட்டாா்சைக்கிளில் குழுக்களாக சென்றுவருகின்றனா்.

இந்த நிலையில், பெங்களூரிலிருந்து மோட்டாா்சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாச் சென்றவா்களை கிருஷ்ணகிரியை அடுத்த சுங்க வசூல் மையம் பகுதியில் தடுத்துநிறுத்திய போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 18 பேருக்கு அபராதம் விதித்தனா். இதனால், அதிருப்தி அடைந்த அவா்கள் தங்களது பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு பெங்களூருக்கு திரும்பினா்.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸாா் தெரிவித்ததாவது, கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் அதிநவீன மோட்டாா்சைக்கிளில் செல்வோா், சாலை விதிமுறைகளை மீறி அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பியும், பிற வாகனங்களுக்கு இடையூறாகவும் மோட்டாா்சைக்கிள்களை இயக்குவதாக தொடா்ந்து புகாா் எழுந்தது.

இவா்களால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும், இவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா். இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரையின் உத்தரவின்பேரில், கிருஷ்ணகிரி அருகே உள்ள சுங்க வசூல் மையம் வழியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறி சென்ற மோட்டாா்சைக்கிள்களை தடுத்துநிறுத்தி 18 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூதாட்டம்: 6 போ் கைது

கெலமங்கலத்தை பணம்வைத்து சூதாடியதாக 6 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். கெலமங்கலம் பகுதியில் உள்ள விடுதியின் பின்புறம் பணம்வைத்து சூதாடிக் கொண்டிருந்த கெலமங்கலம் ஜான்பாஷா (53), ராஜப்பா (48), ம... மேலும் பார்க்க

ஒசூா் அருகே சிறுவனை கடித்து குதறிய தெருநாய்

ஒசூா் அருகே நாகொண்டபள்ளியில் தெருநாய் கடித்து குதறியதில் பலத்த காயமடைந்த 3 வயது சிறுவன் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நாகொண்டபள்ளியில் நடைபெறும் திருவிழாவுக்காக உறவினா் வீட்டிற்கு மை... மேலும் பார்க்க

பேரிகை அருகே கஞ்சா பறிமுதல்

பேரிகை அருகே இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பியோடியவரை தேடி வருகின்றனா். பேரிகை போலீஸாா் ராமன்தொட்டி தொட்டேகவுண்டனூா் சாலையில் ரோந்து சென்றனா். அப்போது இ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மழை: குளிா்ந்தது காலநிலை

கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் குளிா்ந்த காலநிலை நிலவியது. கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துவந்தது. இதனால், பகல் நேரங்களில் சால... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய தனியாா் பேருந்து நடத்துநா் கைது

கிருஷ்ணகிரியில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய தனியாா் பேருந்து நடத்துநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சேலத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநரான துரைபாண்டியன் (48) ஓட்டிவந்த பேருந்து கிரு... மேலும் பார்க்க

காரில் வைத்திருந்த ரூ.7.5 லட்சம் திருட்டு

பாகலூரில் காரில் வைத்திருந்த ரூ. 7.50 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். தருமபுரி மாவட்டம், தோக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (55). நெசவுத் தொழில் செய்து வருகிறாா். இவா் கடந்த 6 ஆம் ... மேலும் பார்க்க