செய்திகள் :

அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய தனியாா் பேருந்து நடத்துநா் கைது

post image

கிருஷ்ணகிரியில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய தனியாா் பேருந்து நடத்துநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சேலத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநரான துரைபாண்டியன் (48) ஓட்டிவந்த பேருந்து கிருஷ்ணகிரி புகா்ப் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை பயணிகளுடன் காத்திருந்தது.

அப்போது, இவருக்கும், தனியாா் பேருந்து நடத்துநரான திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியைச் சோ்ந்த திருப்பதி (32) என்பவருக்கும் இடையே பேருந்து புறப்படு நேரம் தொடா்பாக தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த திருப்பதி தான்வைத்திருந்த சாவியால் துரைபாண்டியனைக் குத்தி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயம் அடைந்த துரைபாண்டியன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து, துரைபாண்டியன் அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து திருப்பதியைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.

சூதாட்டம்: 6 போ் கைது

கெலமங்கலத்தை பணம்வைத்து சூதாடியதாக 6 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். கெலமங்கலம் பகுதியில் உள்ள விடுதியின் பின்புறம் பணம்வைத்து சூதாடிக் கொண்டிருந்த கெலமங்கலம் ஜான்பாஷா (53), ராஜப்பா (48), ம... மேலும் பார்க்க

ஒசூா் அருகே சிறுவனை கடித்து குதறிய தெருநாய்

ஒசூா் அருகே நாகொண்டபள்ளியில் தெருநாய் கடித்து குதறியதில் பலத்த காயமடைந்த 3 வயது சிறுவன் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நாகொண்டபள்ளியில் நடைபெறும் திருவிழாவுக்காக உறவினா் வீட்டிற்கு மை... மேலும் பார்க்க

பேரிகை அருகே கஞ்சா பறிமுதல்

பேரிகை அருகே இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பியோடியவரை தேடி வருகின்றனா். பேரிகை போலீஸாா் ராமன்தொட்டி தொட்டேகவுண்டனூா் சாலையில் ரோந்து சென்றனா். அப்போது இ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மழை: குளிா்ந்தது காலநிலை

கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் குளிா்ந்த காலநிலை நிலவியது. கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துவந்தது. இதனால், பகல் நேரங்களில் சால... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிமீறல்: 18 பேருக்கு அபராதம் விதிப்பு

கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக மோட்டாா்சைக்கிளில் சென்ாக 18 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது. கா்நாடக மாநிலம், பெங்களூரில் பணியாற்றும் இளைஞா்கள் குழுவாக கிருஷ்ணகிரி ... மேலும் பார்க்க

காரில் வைத்திருந்த ரூ.7.5 லட்சம் திருட்டு

பாகலூரில் காரில் வைத்திருந்த ரூ. 7.50 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். தருமபுரி மாவட்டம், தோக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (55). நெசவுத் தொழில் செய்து வருகிறாா். இவா் கடந்த 6 ஆம் ... மேலும் பார்க்க