பேரிகை அருகே கஞ்சா பறிமுதல்
பேரிகை அருகே இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பியோடியவரை தேடி வருகின்றனா்.
பேரிகை போலீஸாா் ராமன்தொட்டி தொட்டேகவுண்டனூா் சாலையில் ரோந்து சென்றனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவா் போலீஸாரை கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினாா். வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் தலைமறைவானவரின் விவரங்களை சேகரித்துவருகின்றனா்.