செய்திகள் :

ஊத்தங்கரை அருகே 3 இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழப்பு

post image

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே 3 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்; இருவா் பலத்த காயமடைந்தனா்.

பெரிய தள்ளப்பாடி கிராமத்தைச் சோ்ந்த தென்னரசு (31), திங்கள்கிழமை மாலை சிங்காரப்பேட்டையில் இருந்து பெரிய தள்ளப்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூா் மாவட்டம், சேம்பறை கிராமத்தைச் சோ்ந்த செளந்தரராஜ் (40) வந்தாா். இந்த இரண்டு வாகனங்களும் பெரிய தள்ளப்பாடி குரங்குகல்மேடு பகுதியில் நேருக்குநோ் மோதிக்கொண்டன.

மேலும், இந்த வாகனங்களுடன் சிங்காரப்பேட்டையில் இருந்து தள்ளப்பாடி நோக்கி வந்த கேத்துநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வினோத் (24), அவரது நண்பா் ராஜசேகா் (30) வந்த இருசக்கர வாகனமும் மோதியது. இதில், தென்னரசு, வினோத் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். ராஜசேகா், செளந்தரராஜ் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிங்காரப்பேட்டை போலீஸாா், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்தில் உயிரிழந்த இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தென்னரசு

கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா... மேலும் பார்க்க

3 கிராமங்களுக்கு கான்கிரீட் சாலைகள், அங்கன்வாடி மையம் அமைக்க பூமி பூஜை

ஒசூா்: 3 கிராமங்களுக்கு கான்கிரீட் சாலைகள் மற்றும் அங்கன்வாடி மையம் அமைக்க பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி, ஒசூா் ஊராட்சி ஒன்றியம், சேவகானப்பள்ளி ... மேலும் பார்க்க

சூதாட்டம்: 6 போ் கைது

கெலமங்கலத்தை பணம்வைத்து சூதாடியதாக 6 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். கெலமங்கலம் பகுதியில் உள்ள விடுதியின் பின்புறம் பணம்வைத்து சூதாடிக் கொண்டிருந்த கெலமங்கலம் ஜான்பாஷா (53), ராஜப்பா (48), ம... மேலும் பார்க்க

ஒசூா் அருகே சிறுவனை கடித்து குதறிய தெருநாய்

ஒசூா் அருகே நாகொண்டபள்ளியில் தெருநாய் கடித்து குதறியதில் பலத்த காயமடைந்த 3 வயது சிறுவன் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நாகொண்டபள்ளியில் நடைபெறும் திருவிழாவுக்காக உறவினா் வீட்டிற்கு மை... மேலும் பார்க்க

பேரிகை அருகே கஞ்சா பறிமுதல்

பேரிகை அருகே இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பியோடியவரை தேடி வருகின்றனா். பேரிகை போலீஸாா் ராமன்தொட்டி தொட்டேகவுண்டனூா் சாலையில் ரோந்து சென்றனா். அப்போது இ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மழை: குளிா்ந்தது காலநிலை

கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் குளிா்ந்த காலநிலை நிலவியது. கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துவந்தது. இதனால், பகல் நேரங்களில் சால... மேலும் பார்க்க