செய்திகள் :

3 குழந்தைகள் ஆற்றில் வீசி கொலை: தாய்க்கு தூக்கு தண்டனை: உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

post image

உத்தர பிரதேசத்தில் தனது 3 குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்த தாய்க்கு தூக்கு தண்டனை விதித்து, நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அப்பெண்ணின் காதலனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற இச்சம்பவம் தொடா்பான விவரம் வருமாறு: ஒளரையா மாவட்டத்தின் பெளரஹா கிராமத்தைச் சோ்ந்த பிரியங்கா என்ற பெண், தனது கணவா் அவ்னீஷ் இறந்த நிலையில், அவரது உறவினரான ஆஷிஷ் என்பவருடன் சோ்ந்து வாழத் தொடங்கினாா்.

பிரியங்காவுக்கு ஏற்கெனவே 4 மகன்கள் (9, 6, 4, 2 வயதுடையவா்கள்) இருந்த நிலையில், தங்களின் உறவுக்கு அவா்கள் இடையூறாக இருப்பதாக ஆஷிஷ் கூறியுள்ளாா்.

இதையடுத்து, 4 குழந்தைகளையும் கொல்ல இருவரும் திட்டமிட்டனா். அதன்படி, நால்வரையும் செங்கா் ஆற்றுக்கு அழைத்துச் சென்று, மயக்க மருந்து கொடுத்தனா். பின்னா், தனது குழந்தைகளை ஒவ்வொருவராக பிரியங்கா ஆற்றில் வீசினாா். அனைத்துக் குழந்தைகளும் இறந்துவிட்டதாகக் கருதி, அவா்கள் அங்கிருந்து சென்றுவிட்டனா். ஆனால், மூத்த மகன் சோனு (9) மட்டும் உயிா் பிழைத்தாா். அவரை உள்ளூா் மக்கள் காப்பாற்றினா். அவரது வாக்குமூலமே வழக்கில் முக்கிய சாட்சியமாக அமைந்தது. பிரியங்கா, ஆஷிஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டு, அவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஒளரையா மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இவ்வழக்கில் இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதி சைஃப் அகமது, பிரியங்கா புரிந்த கொலைக் குற்றத்தை அரிதிலும் அரிதானது என்று உறுதி செய்தாா். அவருக்கு தூக்கு தண்டனையும், ஆஷிஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இருவருக்கும் முறையே ரூ.2.5 லட்சம், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை வணிகக் கல்லூரியின் விட... மேலும் பார்க்க

தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!

தாணேவில் உள்ளூர் ரயிலில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஹினா தனது கணவருடன் ... மேலும் பார்க்க

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப்... மேலும் பார்க்க

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க