செய்திகள் :

3 நாள்களில் 3வது சம்பவம்,, ஒடிசாவில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

post image

ஒடிசாவில் மேலும் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் மயூர்கஞ்ச் மாவட்டத்தில் பெண் ஒருவர் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த மூன்று நாள்களில் மாநிலத்தில் நிகழ்ந்த மூன்றாவது சம்பவம் இதுவாகும்.

மயூர்கஞ்ச் மாவட்டத்தில் 31 வயது பெண் ஒருவரை, அவரது குடும்பத்திற்கு நெருங்கிய நான்கு பேரும் வலுக்கட்டாயமாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இல்லாத சமயத்தில் இந்தக் கொடுமை அரங்கேறியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி நால்வரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாகவும் நால்வரும் மிரட்டியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தேட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் நால்வரும் தலைமறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

திங்கள்கிழமை இரவு நடந்த இந்த சம்பவம், மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை கோபால்பூர் கடற்கரையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் நான்கு சிறார்கள் உள்பட 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

செவ்வாய்க்கிழமை கியோஞ்சர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு, ஒரு மரத்தில் தூக்கிலிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

என்னதான் ஆச்சு ஏர் இந்தியாவுக்கு..? மீண்டும் தில்லிக்கே திரும்பிய விமானம்!

தில்லியிலிருந்து வியட்நாம் நாட்டுக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் மீண்டும் தில்லியிலேயே தரையிறக்கப்பட்டது. தில்லியிலிருந்து வியட்நாமின் ஹோ சி மின் நகரத்துக்கு இன்று (ஜூன் ... மேலும் பார்க்க

ஆர்சிபி கூட்ட நெரிசல் விவகாரம்! 3 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதத்துடன் மசோதா முன்மொழிவு!

பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், கூட்ட நெரிசல் கட்டுப்பாடு மசோதா முன்மொழியப்பட்டது.ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பை வென்றதை கொண்டாடுவதற்காக பெங்களூரில... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியைப் புகழ்ந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர்!

பாஜக அரசின்கீழ் தில்லியில் நல்லாட்சி நடத்தப்படுவதாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.தில்லி தலைமை செயலகத்துக்கு வருகை தந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், தில்லி முதல்வர் ரேகா குப்தா, த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கரோனா பாதிப்புகள் உறுதி! ஒருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள... மேலும் பார்க்க

ஒடிசாவில் தொடரும் காலரா! பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு!

ஒடிசாவில் காலரா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், 2 மாவட்டங்களின் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் திறப்பை ஒத்திவைக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோடைக்கால விடுமுறைகள் ம... மேலும் பார்க்க

ஏர் இந்தியா போயிங் விமானத்தில் கோளாறு! உண்மையைக் கூறிய ஊழியர்கள் பணிநீக்கம்!

கடந்தாண்டில் லண்டனுக்கு இயக்கப்பட்ட போயிங் விமானத்தில் கோளாறு இருந்ததைச் சுட்டிக் காட்டிய, 2 விமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யபட்டதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்த... மேலும் பார்க்க