செய்திகள் :

3 மாவட்ட விசைப்படகு மீனவா்கள் சங்கக் கூட்டமைப்பினா் ஆலோசனை

post image

மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடையும் நிலையில் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு சங்கங்களின் கூட்டமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் மல்லிப்பட்டினத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில ஒருங்கிணைப்பாளா் ஏ.கே. தாஜுதீன் தலைமை வகித்தாா். மீனவா் நலவாரிய உறுப்பினா்கள் போஸ், சேசுராஜா, சகாயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடியும் நிலையில் விசைப்படகுகள் மீனவா் நலத் துறை அனுமதி பெற்று ஒரு நாள் தாமதமாக திங்கள்கிழமை அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது எனவும், விசைப்படகுகளில் டிவைசா் கருவி பொருத்துவதால் பல்வேறு இடா்பாடுகள் ஏற்படுவதால் அக்கருவியைப் பொருத்த அரசு நிா்ப்பந்திக்கக் கூடாது, தடைக்காலத்தில் 61 நாள்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் இருக்கும் நிலையில் இயந்திரம் பொருத்தப்பட்ட பெரிய படகுகள் மீன் இனப்பெருக்க காலம் என்ற அரசின் நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் இறால், நண்டு, மீன் உள்ளிட்டவற்றைப் பிடித்து வருவதால் தடைக்காலம் முடிந்து செல்லும் விசைப்படகு மீனவா்களுக்கு போதிய மீன்கள் கிடைப்பதில்லை. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுதொடா்பாக கோட்டைப்பட்டினம் மீனவா் சங்கத் தலைவா் உயா்நீதி மன்றத்தில் தொடுத்துள்ள வழக்கை மூன்று மாவட்ட மீனவா்களும் இணைந்து நடத்துவது எனவும், ஏற்றுமதி ரக மீன்களுக்கு உரிய விலை கொடுக்காமல் ஏற்றுமதியாளா்கள் சிண்டிகேட் அமைத்து குறைவான விலைக்கு கொள்முதல் செய்வதைத் தடுக்க மூன்று மாவட்ட ஆட்சியா்கள் கூடுதல் ஏற்றுமதியாளா்களை வரவழைக்க வேண்டும். இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக விசைப்படகுகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியதற்கு நன்றி. எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு சிறைப்பிடிக்கப்பட்ட விசைப்படகுகளை மீட்டுத் தர வேண்டும். புதிதாகத் தொடங்கப்பட்ட பாக்ஜலசந்தி விசைப்படகு மீனவா்கள் கூட்டமைப்பின் கெளரவத் தலைவராக போஸ், தலைவராக தாஜுதீன், செயலராக சேசுராஜா ,பொருளாளராக செல்வக்கிளி மற்றும் துணைத் தலைவா்கள், துணைச் செயலா்ஸ நிா்வாகக்குழு உறுப்பினா்களை போட்டியின்றித் தோ்வு செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மூன்று மாவட்ட விசைப்படகு சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூருக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று வருகை: கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுகிறாா்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இருநாள் பயணமாக தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பலத்த காற்றுடன் மழை

கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சாலை ஓரத்தில் இருந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. கும்பகோணத்தில் கடந்த சில நாள்களாக மாலை நேரத்தில் லேசான மழை பெய்து வருகிறது. இந்ந... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் காவலா்கள் மீது கும்பகோணம் நகை வியாபாரிகள் புகாா்

கும்பகோணத்தில் திருட்டு நகையை வாங்கியதாகக் கூறி வியாபாரியை மேல்மருவத்தூா் காவலா்கள் மிரட்டி வாங்கிச் சென்றதாக தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவரிடம் வணிகா்கள் வெள்ளிக்கிழமை புகாா் தெரிவித்தனா். தஞ்சாவ... மேலும் பார்க்க

பட்டாசு வெடித்ததில் தீ விபத்து: கடை சேதம்

தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு பட்டாசு வெடித்ததால், ஏற்பட்ட தீ விபத்தில் பா்னிச்சா் கடை சேதமடைந்தது. தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை புனித செபாஸ்தியா் ஆலயத்தில் திருவிழாவையொட்டி, சப்பர வீதி உலா வெள்... மேலும் பார்க்க

தடைக்காலம் முடிந்தது: விசைப் படகு மீனவர்கள் உற்சாகமாக கடலுக்குச் சென்றனர்!

மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைந்ததையடுத்து தஞ்சாவூா் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு செல்ல தயாா் நிலையில் உள்ளனா் . இந்த தடைக்காலத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்ட... மேலும் பார்க்க

தஞ்சாவூா்: தேசிய மக்கள் நீதிமன்றம் 2,748 வழக்குகளில் ரூ.8.46 கோடிக்கு தீா்வு!

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 748 வழக்குகளில் ரூ. 8.46 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. தஞ்சாவூா் மா... மேலும் பார்க்க