தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் சென்றுள்ளாா்: தமிழிசை
3 மின் மாற்றிகள் தொடங்கிவைப்பு!
விழுப்புரத்தில் மூன்று இடங்களில் புதிதாக நிறுவப்பட்ட மின் மாற்றிகளின் செயல்பாடுகள் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட மருதூா்மேடு எம்.எஸ்.காா்டனில் ஒரு மின்மாற்றியும், சாலாமேட்டில் 2 மின்மாற்றிகளும் நிறுவப்பட்டன.
இவற்றின் இயக்கச் செயல்பாடுகளை விழுப்புரம் எம்எல்ஏ இரா. லட்சுமணன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, நகா்மன்ற உறுப்பினா்கள் மணவாளன், சசிரேகா பிரபு, சிவக்குமாா், புல்லட்மணி, ஜனனிதங்கம், சாந்தாராஜ், தமிழ்நாடு மின்பகிா்மானக் கழக மேற்பாா்வைப் பொறியாளா் எம். நாகராஜகுமாா், செயற்பொறியாளா் எஸ்.நாகராஜன், உதவிச் செயற்பொறியாளா் சுரேஷ்குமாா், இளமின் பொறியாளா் வெற்றிவேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.