செய்திகள் :

"3, 5, 8ம் வகுப்பு பிள்ளைகளுக்கு தேர்வு வைப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்" - சீமான் பேச்சு!

post image

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசு, மாநில கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

இதுகுறித்துப் பேசுகையில் தேசிய கல்விக்கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் எனப் பேசியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அவர், "நம்முடைய கல்வி முறை 8ம் வகுப்புவரை தேர்வில்லாமல் தேர்ச்சி கொடுப்பதுதான். 9ம் வகுப்பில் ஒரு மாதிரி தேர்வு வைக்க வேண்டும். 10ம் வகுப்பில் பொதுத்தேர்வு. அப்படித்தான் இருந்தது. அவர்கள் புதிய கல்விக் கொள்கையில் 3, 5, 8வகுப்பிலெல்லாம் பொதுத் தேர்வு வருகிறது.

தேசிய கல்விக் கொள்கை - 2020

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோற்றுவிட்டால் கூட நமது பிள்ளைகள் உயிரை மாய்த்துக்கொள்கிற அவலத்தை நாம் பார்க்கிறோம். அதற்கு பிறகு நீட்டில் தோற்றுவிடும் அச்சத்தில் கூட பிள்ளைகள் இறந்துபோகிறார்கள். காரணம் சமூகத்தை எதிர்கொள்ள பயப்படுவதுதான்." என்றார்.

மேலும், "12ம் வகுப்புக்கே இப்படி என்றால் 3, 5, 8ம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்றால் பிள்ளைகள் மனதில் பள்ளிக்கூடம் என்பதே நரகம் ஆகிவிடும். படிக்க வேண்டும் என்ற மனநிலை ஒடிந்து மன நோய்க்கு தள்ளப்பட்டுவிடுவார்கள்.

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை

உலகிலேயே கல்வியில் சிறந்ததாக இருக்கும் நாடுகள் பிள்ளைகளை 8 வயதில் தான் ஒன்றாம் வகுப்பிலேயே சேர்க்கின்றன. அந்த வயதில் பொதுத் தேர்தல் எழுத சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எந்த வடிவத்தில் வந்தாலும் இந்தக் கல்விமுறையை நாம் ஏற்கமாட்டோம்." எனக் கூறினார்.

அத்துடன் தமிழக அரசின் 11ம் வகுப்புக்கு பொதுத் தேர்வை நீக்கும் முடிவு குறித்து, "கல்வி தனியார்மயமாகிவிட்டதால் தனியார் நிறுவனங்கள் 11,12 இரண்டு ஆண்டுகளிலும் 12ம் வகுப்பு பாடத்தையே நடத்துகின்றன. அதனால் நம் பிள்ளைகள் 11ம் வகுப்பு பாடத்தில் கவனம் செலுத்தவில்லை. அதனால் 11ல் பொதுத்தேர்வு கேட்டோம்.

11ம் வகுப்பில் பொதுத்தேர்வு வைக்கும்போது மாணவர்கள் அதிலேயே தோல்வியடைந்து இடை நிற்கும் நிலை வருகிறது. அதனால் தோல்வியடையும் பாடங்களை அரியர் முறையில் மறுதேர்வு எழுத நெறிமுறை வேண்டும்." எனப் பேசினார்.

அரசுத்திட்ட விழா; அழைப்பு விடுக்காத இந்தியன் வங்கித் தலைவர் மீது உரிமை மீறல் தீர்மானம்

மதுரையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் வழங்கும் விழாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை அழைக்காத இந்தியன் வங்கித் தலைவர் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மான... மேலும் பார்க்க

'கெட்டப் பேராகுது; கலைஞ்சு போங்க!’ - கண்டிஷன் போடும் அமைச்சர் சேகர் பாபு? முறிந்த பேச்சுவார்த்தை

அப்செட்டாக மண்டலங்கள் 5 மற்றும் 6 யை தனியார்மயப்படுத்துவதை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 10 வது நாளை எட்டியிருக்கிற... மேலும் பார்க்க

"எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை!" - தொல்.திருமாவளவன் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"தம... மேலும் பார்க்க

பாமக பொதுக்குழு முதல் விசிக ஆர்ப்பாட்டம் வரை - 09.08.2025 முக்கியச் செய்திகள்!

Pஆகஸ்ட் 9 முக்கியச் செய்திகள்தேனி பங்களாமேடு பகுதியில் 14 வயது சிறுவன் பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் என்ஜின் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சல்மான் கானை தொடர்பு கொண்டதற்கா... மேலும் பார்க்க

"எம்.ஜி.ஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை" - எடப்பாடி பழனிசாமி காட்டம்

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "எம்ஜிஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை. எம்ஜிஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வமானவர். அப்படிப்பட்டவரை விமர்... மேலும் பார்க்க

'பக்கம் எண் 44, வாக்குறுதி எண் 285' - திமுகவின் வாக்குறுதியும் பொய் பேசிய சேகர் பாபுவும்?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 9 வது நாளாக போராடி வருகின்றனர். தங்கள் மண்டலங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பது பணி நிரந்தரமுமே அவர்களின் கோரிக்கை. போராட்டக்குழுவுடன் ப... மேலும் பார்க்க